பக்கம் நடந்தாள்.
அங்கே கனபாடிகள் சிவப்பழமாய் உட்கார்ந்து கண்களை முடி ஜபம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் திரும்பி வந்தாள்.
"என்ன அத்தை அத்தி பூத்தாப்பல?" என்றாள் கமலா.
"பரண்டை கொண்டு வந்திருக்கனே, பார்க்கலையா? இன்னும் ரெண்டு நாள்ல உங்க பாட்டிக்கு திவசம் வரப் போறதுடி ! ஒரு திவசத்துக்காவது வராம இருந்திருக்கனோ?"
"உங்க அம்மாவுக்குன்னு சொல்லு. இது மாசி மாசம்கறது மறந்தே போச்சு. பாட்டியோட திதி இப்பத்தான் வர வழக்கம். அப்பாவுக்கு ஞாபகம் இல்லையோ, என்னவோ!"
"பாவம், அவனுக்கு எத்தனையோ கவலை ! மறந்திருப்பான் !"
கனபாடிகள் ஜபத்தை முடித்துக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு வந்தபோது "கெளரி அத்தை வந்திருக்கா! பார்த்தேளா, அப்பா" என்றாள் கமலா.
"கணீர்னு குரல் கேட்டுது, வெண்கலக் குரலாச்சே! எங்கே அவள்?" என்று கேட்டார் கனபாடிகள்.
"புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கப் போயிருக்கா!" என்றாள் கமலா .
கனபாடிகள் தொழுவத்துக்குப் போய் "வா, கெளரி ! அவர் செளக்கியமா? நல்ல வேளை! நீ வந்தே; இல்லேன்னா அம்மாவை மறந்தே போயிருப்பேன். என்னைக்கு சிராத்தம்? புதன்கிழமையா இப்பவே கிட்டாவை அனுப்பி வாத்தியாரிடம் சொல்லிட்டு வரச்சொல்றேன்" என்றார்.
"ஏன், ஒரு மாதிரி இருக்கீங்க எல்லாரும், கலகலப்பே இல்லாம?" என்று கேட்டாள் அத்தை.
“கமலா சொல்லியிருப்பளே" என்றார் கனபாடிகள்.
"ஏதோ குழப்பம்னு மாத்திரம் மொட்டையாச் சொல்லி நிறுத்திட்டா. அப்புறம் எதுவும்