Sollamal thottu sellum thendral... - Tamil thodarkathai
Sollamal thottu sellum thendral... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
This is her twenty eighth novel in Chillzee.
கதையைப் பற்றி:
வணக்கம் நட்பூஸ்,
இன்னொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இது சில வருடங்களுக்கு முன்பே நான் எழுத யோசித்த கதை. கதையில் ஹீரோ ஹீரோயினுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தால் நான்ட்ஸ் - எஸ்.கே'வே சரியாக இருக்கும் என்று தோன்றியது.
ஸோ, இதுவும் ஒரு நான்ட்ஸ் & எஸ்.கே கதை :-)
கதை சுருக்கம்:
ஒரு விபத்தில் பழைய நினைவுகள் இழந்து விடுகிறான் எஸ்.கே. அவனுக்கு நினைவு இருப்பது ஒன்றே ஒன்று - அது 'நந்தினி'!
யார் நந்தினி என்று புரியாமல் தவிப்பவன் ஒரு கிராமத்தில் டாக்டராக இருக்கும் நந்தினியை சந்திக்கிறான். அவள் யார் என்று நினைவில்லை என்றாலும் அவள் மீது காதல் வசப் படுகிறான்.
எஸ்.கே'விற்கு பழைய வாழ்க்கை நினைவில் இல்லை என்பது தெரியாமலே, நந்தினியும் அவனை விரும்புகிறாள். எங்கே உண்மையை சொன்னால் நந்தினி அவனை நோயாளியாக பார்க்க தொடங்கி விடுவாளோ என்ற எண்ணத்தில் முதலில் உண்மையை மறைத்த எஸ்.கே, நந்தினி காதலை சொன்ன பிறகு எப்படி அவளிடம் உண்மையை சொல்வது என்று புரியாது தயங்குகிறான்.
நந்தினிக்கு உண்மை தெரிய வந்ததா? எஸ்.கே'விற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? நந்தினி - எஸ்.கே காதல் வெற்றிப் பெற்றதா???
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 15 - பிந்து வினோத்
“சாரி எஸ்.கே... இங்கே ஒரு வேலை வந்திருச்சு... நீங்க என்ன சொன்னீங்க???” என்றுக் கேட்டாள்.
எஸ்.கே’வும் அவனின் யோசனையில் இருந்து வெளியே வந்தான்... நந்தினியின் கேள்விக்கு பதிலாக,
“ஒன்னுமில்லை நான்ட்ஸ்... கால் கட் செய்யட்டுமா?” என்றான்.
“சரி,” என்று அழைப்பை துண்டித்தப் பிறகே
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 16 - பிந்து வினோத்
மற்ற நாட்களைப் போல அன்று எஸ்.கே நேரம் பார்க்காமல் வேலை செய்யவில்லை. மணி ஐந்து ஆனதுமே வேலை செய்துக் கொண்டிருந்த இருவரையும் கூட வேலையை நிறுத்தச் சொல்லி உடன் அழைத்துச் சென்றான். சீதாவிடம் அவர்களுக்கு அன்றைய சம்பளம் வாங்கிக் கொடுத்து விட்டு
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 17 - பிந்து வினோத்
“அன்னைக்கு நீ என்னை இப்படி எழுப்பினப்போ என் மனசுல நான் நினைச்சது உனக்கு தெரிஞ்சிட கூடாதுன்னு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா, நான்ட்ஸ்... நீ வேற என்னை அறைஞ்சுட்ட... எங்கே நான் வாய் வழியா நினைச்சதை உளறிட்டேனோன்னு பயந்தே போயிட்டேன் தெரியுமா...”
“அப்படி என்ன எனக்கு தெரியக் கூடாததா
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 18 - பிந்து வினோத்
யோசிக்க ஒரு நொடி கூட எடுக்காமல் மீண்டும் அவளின் உதடுகளை தன் உதட்டால் மூடினான் எஸ்.கே. இந்த தடவை அவனிடம் சிறு தயக்கம் கூட இல்லை... நந்தினி அவனை விரும்புகிறாள்... அவனும் அவளை விரும்புகிறான்... அவளுக்காக, அவளின் நேசத்திற்காக அவன் எதையும் செய்வான்!!!! சில நிமிடங்களுக்கு பிறகு மெல்ல முகத்தை
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 19 - பிந்து வினோத்
நந்தினி கையில் இருந்த காலி தட்டை வாங்கிக் கொண்டவன், அப்படியே அவளின் உதட்டோரம் ஒட்டி இருந்த சிறு துணுக்கை கையில் எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டான்...
“எஸ்.கே.... உங்களுக்கு வேணும்னா நான் காலி செய்றதுக்கு முன்னாடி கேட்டு இருந்திருக்கனும்...”
“அதெல்லாம் இது போல
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 20 - பிந்து வினோத்
“வீட்டுக்கு வந்ததும் என் ரொமான்ட்டிக் பக்கத்தை காட்டுறேன் சொன்னேனே, ஞாபகம் இருக்கா நான்ட்ஸ்...” என்றான் எஸ்.கே கிசுகிசுப்பான குரலில்...
திகைத்தாலும், நந்தினிக்கு கலக்கம் ஏற்படவில்லை... சிரிப்பு தான் வந்தது...
“எஸ்.கே... எதுக்கு இப்படி ரகசியமா பேசுறீங்க???
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 21 - பிந்து வினோத்
“ஹ்க்கும்... நாம லவ் செய்ய ஆரம்பிச்சே நல கணக்கு தான் ஆச்சு... அதுக்குள்ளே கல்யாணம், ஹனிமூன் பேச்சு தேவையா???”
“தப்பு நனட்ஸ்... நாம காதலை வாய் திறந்து சொல்லி நாள் கணக்காச்சு... ஆனால், இரண்டுப் பேருமே காதலிக்க தொடங்கி பல பல மாசம் ஆச்சு...”
நந்தினிக்கும் எஸ்.கே சொல்வது உண்மை என்று
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 22 - பிந்து வினோத்
“ஹுஹும்... அது நல்லா இருக்காது. நானே டாக்டர் பாலா கிட்ட பேசிடுறேன். நீங்க கவலைப் படாதீங்க... இந்த சாரீ, சூப்பரா இருக்கு எஸ்.கே... நான் வீட்டுக்கு ஸாரீல தான் வரப் போறேன்... நீங்க என்னைப் பார்த்து மயக்கம் போடப் போறீங்க...”
“என் நான்ட்ஸ் எப்போவுமே அழகு தான்!”
“தேங்க்ஸ்
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 23 - பிந்து வினோத்
பாலா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டு, மீண்டும் எஸ்.கே’வைப் பார்த்தாள்! அவன் முகம் இருந்த விதத்தைப் பார்த்து அவளுக்கு சிரிக்க தோன்றியது... அவள் வர வேண்டாம் என்று சொன்ன பிறகும் எஸ்.கே எதனால் வந்திருக்கிறான் என்பதை அவளால் எளிதாக ஊகிக்க முடிந்தது! அவன்
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 24 - பிந்து வினோத்
எஸ்.கே அவனுக்காக அவள் ஒன்று செய்ய வேண்டும் என்றதும் முத்தம் கேட்க போகிறான், கட்டி பிடிக்க சொல்லப் போகிறான் என்று தான் நினைத்தாள்... அவனின் எண்ணம் இருக்கும் விதம் அவளை ஆச்சர்யப் படுத்தியது... பெரியப்பா வீட்டில் இருந்து திரும்பி வரும் நேரம் கூட அவள் செய்யும் தவறை சுட்டிக் காட்டினானே
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 25 - பிந்து வினோத்
“ப்ச்... உங்களை தவிர வேற யார் கிட்ட நான் இதை எல்லாம் சொல்றது? நீங்க தான் எனக்கு அம்மா... சும்மா கேளுங்க...”
“பொண்ணு இப்படி பேசினா அம்மா எல்லாம் என்ன செய்வாங்கன்னு தெரியுமா???”
“அதெல்லாம் எனக்கு தெரியாது... ஆனால் நீங்க புரிஞ்சுப்பீங்க அது எனக்கு தெரியும்...”
விஜயாவின்
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 26 - பிந்து வினோத்
“உங்களுக்கு என்ன குறைச்சல்...” என்ற நந்தினி எஸ்.கே வின் அருகே வந்து அவனின் முகத்தை தன் கை விரலால் அளந்தாள்.
“உங்களைப் போல வேற யாரையுமே நான் சைட் அடிச்சதில்லை தெரியுமா... நீங்க வெரி ஹாண்ட்சம்... பார்க்க மட்டும் இல்ல, இங்கேயும் அழகு, ரொம்ப அழகு...” என்றபடி அவனின் இதயம் இருக்கும் மார்பு
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 27 - பிந்து வினோத்
எஸ்.கே’விற்கு என்ன தோன்றியதோ குனிந்து விஜயாவின் காலை தொட்டு வணங்கினான்.
“உங்க ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்க பெரிய பலம். கட்டாயம் ஆகஸ்ட்ல உங்க வீட்டுக்கு வருவேன். நீங்க அப்போ எங்களுக்கு சப்போர்ட் செய்யனும்!”
உள்ளம் மகிழ சரி என தலை ஆட்டிய
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 28 - பிந்து வினோத்
“ஏங்க, நீங்க ஒருத் தடவையாவது என் அப்பா, அம்மா கால்ல விழுந்து ஆசி வாங்கி இருக்கீங்க??”
விஜயாவின் கேள்வி புருஷோத்தமனை ஆச்சர்யப்படுத்தியது.
“எதுக்கு கேட்குற?”
“பதில்
... -
தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 29 - பிந்து வினோத்
“எஸ்.கே!!!”
நந்தினியின் கொஞ்சலான சினுங்கலை காதில் வாங்காமல் சீப்பால் அவளின் கூந்தலில் இருந்த சிக்கை எடுக்க முயன்றுக் கொண்டிருந்தான் எஸ்.கே.
“நானே மெதுவா சீவிக்கிறேன் எஸ்.கே... வலிக்குது... நீ என் முடியை விட்டுட்டு இப்படி
...
Page 2 of 3