"ஆமாம், அவர் உயிரோடு வாழ்கிற ஒவ்வொரு நாளும் கடவுள் போட்ட பிச்சை! எந்த நிமிஷமும் அவருக்கு ஆபத்து வரலாம், கடவுள் அருளிருந்தால், பத்து வருஷமும் வாழலாம், இதுதான் உண்மை! அவங்க ரெண்டு பேருக்கும் உன்னைவிட்டால் வேறு யார் நாதி? அவருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, உங்கம்மா தன்னந்தனியா சமாளிக்க முடியுமா? நீ அமெரிக்கா போயிருக்கிற நாலு வருஷத்திலே, அவருக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கலாம், ஆனா, இவ்வளவு நெருக்கடியிலே, நீ அமெரிக்கா போய்த்தான் ஆகணுமா?"
"நோ!" என வானமே இடிந்துவிடும்போல கத்தினான்.
"நோ! எனக்கு எங்கப்பா, அம்மாதான் முக்கியம், அமெரிக்கா படிப்பில்லே! நான் போகப்போறதில்லே! அங்கே போய் படிச்சு முடிச்சு டாலர்லே கோடிக்கணக்கிலே யாருக்காக சம்பாதிக்கணும்? இந்த நிமிஷத்திலிருந்து அவங்களை கண்ணுக்குள்ளே வைச்சு கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ால், தடுமாறிய பாபுவின் பெற்றோரை, டாக்டரே சரிப்படுத்தினார்.
"முத்துசாமி! சாவித்திரியம்மா! ரிலாக்ஸ்! நமக்குள்ளே எதுக்கு இந்த மரியாதையெல்லாம்? சரி, இப்ப நல்ல நேரந்தானே? ரெண்டு, மூணு முக்கியமான சமாசாரம் பேசப்போறோம், உட்காருங்க!"
சாவித்திரி சமையலறைக்குள் நுழைந்து, காபி தயாரித்தாள்.