"சொல்றேன், என் மகனைவிட உங்க பிள்ளை எத்தனை ஆழமா சிந்திக்கிறாங்கிறதை, சொல்லவந்தேன்.......அவன் குரல் தழுதழுக்க, கண்ணீர் தளும்ப, சொன்னான்.....'நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன்! எனக்கு வாய்த்ததுபோல, வேறுயாருக்குமே அப்பா,அம்மா வாய்க்கமாட்டாங்க! அவங்க உயிரே நான்தான்! எனக்காகவே வாழறாங்க! எனக்காக எந்த தியாகமும் செய்ய தயாராயிருக்காங்க, என் மனசு எதற்காகவும் சிறிய அளவுக்குக்கூட வருத்தப்படக்கூடாதுன்னு விரதம் இருக்கிறவங்க, என்னை பார்க்காம, நான் சாப்பிடறதை நேரிலே ரசிக்காம, என்னோட பேசாம, என்னை கட்டிண்டு தூங்காம அவங்களாலே இருக்கவே முடியாது. எனக்கும் அவங்க மனசை நோக அடிச்சுட்டு, எந்த பெரிய படிப்பும், பதவியும், பணமும், பெறணுங்கிற எண்ணமே கிடையாது, எதிர்பாராதவிதமா, எங்கப்பாவை ட்ரீட் பண்ற டாக்டர் புதுசா சில விஷயங்களை, உறவுகளை சொல்லி, அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வங்க டாக்டர் பேச்சைக்கேட்டு, வராதே, அங்கேயே இருக்கிறதுதான் எனக்கு நல்லதுன்னு தடுத்துடுவாங்கன்னு சொன்னான். சார்! நீங்க ரொம்ப கொடுத்துவைச்சவங்க! இந்தமாதிரி பிள்ளை உலகத்திலே யாருக்கு கிடைக்கும்?"
மூன்று ஜோடி கண்களும் குளம் கட்டின!
{kunena_discuss:785}