"சிவகுமார் சார்! நீங்கதான் இப்ப நான் சொல்லப்போற எல்லாத்துக்கும் சாட்சி! ஒண்ணு, இந்த நிமிஷத்திலேயிருந்து முத்துசாமியின் உடல்நலத்துக்கு நான் நேரிடையா பொறுப்பு ஏத்துக்கிறேன், தினமும் இங்கே வந்து செக் பண்ணி, கவனிச்சிக்கிறேன், முத்துசாமியோ, சாவித்திரியம்மாவோ, பாபுவோ, இதுசம்பந்தமா எந்தக் கவலையும் படவேண்டாம், அவங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா, என் பங்களாவிலேயே தங்கவைச்சுக்கறேன்.ரெண்டாவது, பாபுவை மேற்படிப்புக்கு அமெரிக்காவுக்கு நாம் எல்லாரும் சந்தோஷமா அனுப்பிவைக்கிறோம், மூணாவது, முக்கியமானதும்கூட, முத்துசாமியும் சாவித்திரியம்மாளும் சம்மதிச்சா நான் என்ஒன்லி டாட்டர் ரூபாவை பாபுவுக்கு கல்யாணம் செய்துவைக்கிறேன், பாபு சொல்கிற நாளிலே. படிப்பு முடிஞ்சபிறகுன்னாலும் சரி, அதற்குப்பிறகு வேலை கிடைச்சபிறகுன்னாலும் சரி, இல்லே, பாபு அமெரிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னிக்கு ஒரு டாலர் மதிப்பு என்ன தெரியுமோ, 74ரூபா!, மாசாமாசம் ஆயிரம் டாலர் அனுப்பிச்சாலே, வெள்ளம்!"
என்று வெறுப்பேற்றுவார்கள். யதார்த்த நிலைமையை, அவர்களிடம் சொல்லமுடியுமா, சொன்னால்தான் நம்புவார்களா?
"சாப்பிடலாம், வாங்க!" என்று லட்சுமணனின் தந்தை அழைக்க, சேர்ந்து சாப்பிட்டனர்.