சந்திராவின் குறுக்கீடு கேட்டு, அனைவருமே அதிர்ந்துபோயினர்.
ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்.
"சந்திரா! நீ உடனே உள்ளே போ! நாங்க, பெரியவங்க பேசுகிறபோது, சின்னப் பொண்ணு நீ பேசக்கூடாது!"
" சின்னப்பொண்ணா? அப்படி யாரும் இங்கே என் கண்ணுக்கு படலியே! ஏம்ப்பா! ஏம்மா! உங்களுக்கு தெரிகிறதோ?"
" மாப்பிள்ளை! கோபம் வேண்டாம்! சித்ரா உள்ளே போயிட்டா, நாம பொறுமையா பேசுவோம்....."
" அதான் பார்த்தேனே, அவளை அந்த லவ்வர் கையை பிடித்து அழைச்சிகிட்டுப் போகிறதை!....."
"கண்ணா! ஏட்டிக்குப் போட்டியா நீயும் இடக்கு மடக்கா பேசி சூழ்நிலையை கெடுக்காதே! கொஞ்சம் வெளியிலே போய்விட்டுவா! நாங்க பேசினபிறகு உன்னை கூப்பிடறோம்...."
" இன்னும் என்ன பேசறதுக்கு இருக்கு?"
" கண்ணா! சிறுபிள்ளைத்தனமா, எடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
வளை, நிறுத்தி, ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லு, அவன் உன்னை 'லவ்' பண்றதா சொல்றானேன்னு, நான் கேள்வியை முடிக்கிறதுக்குள்ளே, சந்திரா தானும் அவனை 'லவ்' பண்றேங்கறா.....ஏம்ப்பா! இத்தனையும் கேட்டுண்டபிறகு, நான் சந்திரா கழுத்திலே தாலி கட்டறதுக்கென்ன மானங்கெட்டவனா? நெவர்!
இதுதான் அவன் சொன்னது,