சம்பந்தி! நான் உங்களை இன்னமும் அப்படித்தான் நினைக்கிறேன், அதை ஊர்ஜிதப்படுத்தறதும், படுத்தாத தும், நீங்க சொல்லப்போகிற பதில்லே இருக்கு, எனக்கு என்னவோ, என் பிள்ளை பக்கம் நியாயம் இருக்கிறதா, தோணுது, ......"
"சம்பந்தி! ராஜா எங்க வீட்டு சமையற்காரியின் ஒரே பிள்ளை, சிறுவனாயிருந்ததிலேயிருந்து, எங்க வீட்டிலே எங்க குடும்பத்தில் ஒருத்தனா வளர்ந்துட்டான், சந்திராவை குழந்தையிலேயிருந்து, அவனுக்கு தெரியும், அவனுக்கு அஞ்சு வயசாயிருக்கும்போது, சந்திரா பிறந்தாள், அவளை இருபத்துநாலு மணி நேரமும் அன்னியிலிருந்து இன்றுவரை அவன்தான் கவனிச்சுக்கறான், சந்திராவுக்கு எந்த நேரத்திலே பசிக்கும், என்ன வேணும், என்ன பிடிக்கும், எது பிடிக்காது, என்ன டிரஸ் எந்த நேரத்திலே போட்டுப்பா, அவளுக்கு என்ன சினிமா, என்ன பாட்டு, எந்த சீரியல்னு எல்லாம் அவனுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க, உங்க போக்கு புரிகிறது, ஆனா, மிஸ்டர் மாப்பிள்ளை இளைஞராச்சே, அதுவும் அமெரிக்காவிலே உத்தியோகம் பார்க்கிறவராச்சே, நாகரிகம் தெரிந்தவராச்சே, அவருக்குக்கூட எப்படி தெரியாம போச்சு?"
"சந்திரா! சொல்லவந்ததை சட்டுபுட்டுனு ரெண்டு வார்த்தையிலே சொல்லிமுடி, கல்யாண வேலை தலைக்குமேலே கிடக்கு, ....."