"ரெண்டு காதுமே கே காதுதான், ஆனா, வலது காதிலே மெஷின் போட்டுக்கிட்டா கொஞ்சம் கேட்கும்."
"அப்படியா! உங்கமனைவிக்கு?"
"அவளையே கேளுங்க! நான் ஏதாவது சொன்னா, அதுக்கு நேர்மாறா அவ சொல்வா!"
நாதன், தன் மனைவி பாமாவுக்கு ஜாடை காட்ட, அவள் கிழவியை நெருங்கி அம்ர்ந்து கேட்டாள்.
"ஏம்மா! உங்களுக்கு எந்தக் காது சுத்தமா கேட்காது, எது கொஞ்சம் கேட்கும்?"
"ஆண்டவன் எங்க பரிதாபமான நிலையை பார்த்து இரக்கப்பட்டு, ஒரு நல்லது பண்ணியிருக்கான், அவருக்கு வலது காது மாதிரி, எனக்கு இடது காது கொஞ்சமா கேட்கும். அதனாலே, நான் எப்பவும், அவருடைய வலது பக்கமா உட்காருவேன், நிற்பேன், படுத்துப்பேன், அப்பத்தான் அவருக்கு நான் பேசறது கேட்கும், எனக்கும் அவர் பேசறது காதிலே விழும்......."
பெரியவரின் வலது பக்கத்தில் நாதன் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னை 'டா' போட்டு கூப்பிட்டா, நான் பதிலுக்கு, 'டூ' சொன்னேன், தப்பா?"
"அக்கா! நான் அண்ணனை 'டா' போட்டு கூப்பிடலே, அம்மா இன்னிக்கு செய்யப்போறா, போண்டான்னு......."
சுசீலா சிறுபிள்ளைகளின் வெகுளித்தனத்தை ரசித்து சிரித்தாள்.
"சரி சரி, சூர்யா! மல்லிக்கு முத்தா கொடுத்து கொஞ்சு!"