"ஆமாம், தாத்தா! எங்களை வாழவைச்ச அந்த நல்லவர், பாமாவையும் என்னையும் வித்தியாசமே பார்க்காம, அவங்க பிள்ளைங்களாவே ஒண்ணில்லே, ரெண்டில்லே, பத்து வருஷம், வளர்த்ததனாலே, அவங்க பேசற முறையும் பழக்க வழக்கமும் எங்களுக்கும் வந்திடிச்சி......அந்த மனித தெய்வம், ஒரே ஒரு சத்தியம் செய்யச்சொல்லி, கேட்டு வாங்கிகிட்டார் எங்ககிட்டேயிருந்து! அது என்னன்னா, இந்த விஷயம், என் குழந்தைகளுக்கு தெரியக்கூடாது, அவங்க மனசிலே சாதிவிஷம் துவேஷம் பதியக்கூடாது, தமிழ்நாட்டுப்பக்கமே காலடி எடுத்துவைக்கக்கூடாது, உறவுகளே கூடாது, நண்பர்கள் மட்டுமே போதும்னு சொன்னாரு. அதனாலேதான் எங்க சுசீ, சூர்யா, மல்லி யாருக்குமே எதுவும் தெரியாது....."
"ஆமாமாம்! அந்த பிஞ்சு நெஞ்சங்களிலே, இந்த சாதிநச்சு புகவேகூடாது,......"
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தனர்.
"எஸ், யுவர் ஹைனெஸ்! டைனிங் டேபிள்ளே எல்லாரும் உட்காருங்க!"
என பாமா பதில் சொன்னாள்.
நாதன் உரத்த குரலில், "அமுதும் தேனும் எதற்கு? பாமா சாப்பிட அழைக்கையிலே......." என பாடவும், அனைவரும் 'கொல்'லென சிரித்தனர்!
{kunena_discuss:785}