தம்பி, தங்கை இருவரையும் இருபுறமும் அமர்த்தி அவர்களை சுசீலா அணைத்துக்கொண்டபோது, கதவைத் திறந்துகொண்டு, அம்மா அப்பாவுடன் பக்கத்திலுள்ள முதியவர்களும் நுழைந்தனர்.
"குழந்தைகளா! இந்த ரெண்டு பெரியவங்களையும் நீங்க இனிமே உங்க தாத்தா, பாட்டியா ஏத்துண்டு அவங்களை நாம எல்லோரும் சந்தோஷமா வைச்சுக்கணும், சரியா?"
"ஹை! தாத்தா!"
"ஹை! பாட்டி!"
குழந்தைகளின் ஆரத்தழுவிய அணைப்பில் முதியவர்கள் கண்ணீர் உகுத்தனர்.
"எங்க பேரக்குழந்தைங்களை நாங்க பார்த்து, அணைச்சு, கொஞ்சி, முத்தமிட்டு பல வருஷமாயிடுத்து......."
"அழாதே, பாட்டி! இனிமே எங்களை உங்க பேரப்பிள்ளைங்களா நினைச்சுக்குங்க!"
"நிச்சயமா! நீங்கதான் இனிமேல் எங்களுக்கு எல்லாமே!"
"ஆமாம், தாத்தா, பாட்டி இனிமே ராத்திரி தூங்கறதுக்கு மட்டுந
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தான்.
பாமா வெட்கத்தில், "போங்க, போங்க, எல்லாரும் போய் அவங்க அவங்க வேலையை பாருங்க! நான் சமையலை முடிக்கணும், தாத்தா, பாட்டிக்கு பசி வந்துடும்......"என்றாள்.
"இந்தமாதிரி ஒரு குடும்ப காட்சியை நாங்க எங்க ஆயுளிலே பார்த்ததில்லை, இதை பார்த்துக்கொண்டிருந்தால், பசி மறந்தே போகும்!"