தாத்தா மெதுவாக எழுந்து கட்டியிருந்த வேட்டியை சரிசெய்துகொண்டு, "நாதன்! ஒரு அஞ்சு நிமிஷ வேலையிருக்கு, அதை செய்துவிட்டு வரேன், நீயும் வரியா, உதவிக்கு?" என்றார்.
நாதனுடன் தாத்தா வெளியேறினார்!
இருவரும் தாத்தாவின் வீட்டுக்குள் நுழைந்ததும், தாத்தா கதவை தாளிட்டார். நாதனுக்கு ஆச்சரியம்! ஏன் தாளிடுகிறார்?
"நாதன்! சூர்யா சொன்னதிலிருந்து, எனக்கு மனசே சரியாயில்லே, ஏன்? ஏன் நாதன், உங்க குடும்பம் மற்றவங்களோட தொடர்பில்லாம போச்சு? எங்க நிலைமை பரவாயில்லை போலிருக்கே!"
"தாத்தா!........."
"உனக்கும் நான் தாத்தாவா? சரி, சொல்லு!"
"நானும் பாமாவும் தாய்-தந்தையில்லாம, வானத்திலிருந்து குதிச்சிடலே, நாங்களும் மற்ற மக்களைப் போல, பிறந்து வளர்ந்தவங்கதான், என்ன வித்தியாசம்னா, எங்களை எங்க பெற்றவங்களே வீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ழ வசதி செய்துகொடுத்த அந்த மனித தெய்வத்தை நாங்க தினமும் கடவுளா கும்பிடறோம்........."
"அழாதே, நாதன்! அப்படிப்பட்ட நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க, நல்ல விஷயங்கள் நிறைய நடக்குது, ஆனா இந்த பேப்பர்களும், டி.வி.யும், அரசியல்வாதிகளும் அந்த நல்லவைகளை இருட்டடிப்பு செய்து, கெட்டதையே பரப்பறாங்க!"