" என்ன சொல்றீங்க!"
" ஆமாம், கோதை! தூக்கமே வராது, வேலையிலே மனசே ஓடாது, மனசு நம்மை உலுக்கி பைத்தியமாக்கிடும். அதுக்கு மருந்து, மதுதான்! இதை குடிச்சிட்டு நம்மை அறியாம விழுந்து கிடக்கிற சில மணி நேரம்தான், நமக்கு விடுதலை!
கோதை! உனக்கு வாழ்க்கையிலே எத்தனையோ கமிட்மெண்ட்ஸ் இருக்கும். வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு திரும்பவும் முடியாது, திரும்பினாலும், மனசு சமாதானமாகாது, ஏன்னா நமக்கு இந்த தில்லுமுல்லு எல்லாம் புதுசு! நம்ம பழக்கவழக்கத்திலே இல்லாத ஒன்று! எழுந்திரு! நான் உனக்காகவே எடுத்து வந்திருக்கிறேன், ரெண்டு பேருமா குடிப்போம்! நான் உன்னுடனேயே இனி வாழப்போறேன்................."
கோதை வந்தவளை கட்டி அணைத்துக்கொண்டாள்!
வந்தவளின் கண்களில், தூசி படிந்த நல்லதோர் வீணை மூலையில் கவனிப்பாரற்று கிடந்தது!
'நல்லதோர் வீணை செய்தே-அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?' என மகாகவி பாரதி பாடினானோ!