எடுக்கமுடியாது, காலம் தாழ்த்தவும் முடியாது...."
"சரிண்ணே!"
சத்யாவுடன் போனில் தொடர்பு கொண்டார், கிருத்திகாவின் அண்ணன்!
" சத்யா!எப்படியிருக்கே?"
" நான் ரொம்ப நல்லா இருக்கேங்க, கடவுள் புண்ணியத்திலே!"
குரல் போன் மூலமாக வராமல், நேரிடையாக வந்ததால், தலையை தூக்கிப் பார்த்தார்!
சத்தியமூர்த்தி, கையில் பெட்டியுடன்!
குடும்பமே ஆச்சரியத்தில் மூழ்கியது, சத்தியமூர்த்தியின் வரவை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத காரணத்தால்!
கிருத்திகா தன் அண்ணனையும், அவர் தங்கச்சியையும் பார்த்து, விழித்தனர். எப்படி சத்தியமூர்த்தியிடம் விஷயத்தை தெரிவிப்பது, எப்போது தெரிவிப்பது, யார் தெரிவிப்பது என்று விழித்தனர்.
சத்தியமூர்த்தி பெட்டியுடன் தன் அறைக்குள் சென்றதும், இருவரும் ரகசியமாகப் பேசிக்கொண்டனர்.
"தங்கச்சி! அவசரப்படாதே! பக்குவமா சத்தியாவிடம் விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமா சொல்லணும், அதை என்னிடம் விடு! நீ மற்ற விஷயங்களைப் பற்றி அவனிடம் சாதாரணமாகப் பேசு!"
" சரிண்ணே!"
அறையிலிருந்து "கிருத்திகா!" என அழைப்பு வரவே, அவள் அங்கு சென்றாள்.
"என்னங்க?"
" கிருத்திகா! தெருக்கோடி பிள்ளையாருக்கு உடனே ரெண்டு தேங்காய் பூசை பண்ணி செதிலாக உடை! அவர் தயவிலே, போன காரியம், எதிர்பார்த்ததைவிட சுலபமாகவும், விரைவாகவும் நல்லபடியா முடிஞ்சுது!......."
" அப்படியா! ரொம்ப சந்தோஷங்க! இப்பவே பிள்ளையாருக்கு செதில் தேங்காய் உடைச்சிடறேன்"
" நான் இப்ப உடனடியா செய்யவேண்டியது, வியாபாரத்துக்கு முதல் போட, பணம் புரட்டுவதுதான்! நான்தான் ஏற்கெனவே என் நண்பரிடம் கொடுத்துவைத்திருக்கேனே,அதை திரும்ப பெற்றுக்கொண்டு வியாபாரத்தை துவங்கவேண்டியதுதான்!"
" .........."
" கிருத்திகா! முதல் வருடத்திலேயே, போட்ட பணத்தை எடுத்துடலாம், அவ்வளவு லாபம்