அவங்க பேங்க் அகௌண்டுக்கு பணம் மாற்றிவிடப் போகிறேன், உன் பணமும்தான்! நான் காசிக்கு குடும்பத்தோட ஒரு பூசை செய்வதற்காக வந்திருக்கேன், ஊர் திரும்ப ஒரு வாரமாகும். சரியா?"
கைபேசியில் தொடர்பு துண்டிக்கப்பட்டது!
சத்யா மச்சானைப் பார்த்தான். அவர் முகத்தில் அசடு வழிந்தது!
கிருத்திகாவும் பிள்ளைகளும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
சிறிது நேரத்தில், சத்யாவுக்கு வங்கியிலிருந்து ஒரு எஸ்.எம்.எஸ். செய்தி வந்தது!
சத்யாவின் கணக்கில், ஒரு கோடி ரூபாய் வரவு வைத்தாகிவிட்டது!
சத்யா அந்தச் செய்தியை மச்சானிடம் காட்டியதும், அவர் சத்யாவை கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்!
" சத்யா! உன் தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் புரிஞ்சிக்காம, நானும் கிருத்திகாவும் உனக்கு இருதயநோய் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்துகொண்டிருந்தோம், சத்யா! உன்னைப்போல, நாங்களும் வாழ இனி முயற்சிக்கப் போகிறோம், இல்லையா, கிருத்திகா?"