இரண்டு வருடமாக அவனை பார்க்க கூடாது என்று அவள் காட்டிய வைராக்கியம் அவனை பார்த்த அடுத்த நொடியில் தகர்ந்து போனதை எண்ணி அவளுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதனால் தனது வேலையை முடித்து விட்டு 4.30மணிக்கே பார்க்ல் ராகவ் காக காத்திருந்தாள் ராகினி.
தற்போது....
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவள் உணர்வு பெற்று கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். மணி ஐந்து ஆக இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது.
எப்போது வருவான் என்று அவள் கண்கள் வாயிலை நோக்க அவள் மனம் அவளிடம் குற்றப்பத்திரிகை வாசித்தது.
அவன் இன்னொரு பெண்ணை காதலிக்கிறான் என்று தெரிந்ததும் அவனை விட்டு விலகியது சரியாக இருந்தாலும் அவன் எப்படி இருக்கிறான் என்று அறிந்து கொள்ளாதது சரியா? அவன் மீது உள்ள அதிக காதலால் தான் அவனை தொடர்பு கொள்ளாமல் இருந்தேன் என்று சொல்லும் நீ அவனுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளாவிடினும் அறிந்து கொள்ளவாவது செய்திருக்கலாம் அல்லவா? அவனுக்கு திருமணம் முடிந்து விட்டது என்று உனக்கு தெரியுமா? அவனை பற்றி நீ மற்றவரிடம் கூட விசாரிக்கவில்லையே, அவன் உயிரோடு இருக்கிறானா என்று நேற்று உனக்கு தெரியுமா? இந்த இரண்டு வருடத்தில் என்னென்னவோ நடந்து இருக்கலாமே, உன் உதவி அவனுக்கு தேவை பட்டு இருக்கலாமே, இப்போது சொல் உன் அன்பு சுயநலமற்றதா? உன்னை மட்டும் யோசித்துக்கொண்டே சுயநலமாய் அல்லவா இருந்திருக்கிறாய் என மனம் மாறி மாறி குற்றம் சாட்ட தன் தோளில் யாரோ தட்டுவதை உணர்ந்து நிஜ உலகிற்கு வந்தாள்.
தன் கண் முன்னால் அமர்ந்து இருந்தவனைக் கண்டதும், ராகவ் நல்லா இருக்குறியா என்றாள். பதில் எதுவும் கூறாமல் அமைதியாக சிரித்தவனின் சிரிப்பு மனதிற்குள் தைத்தது.
ஸ்வேதா நல்லா இருக்காளா, குழந்தைகள் இருக்காங்களா
ஆமா ராகினி ஸ்வேதா நல்லா இருக்கா, ஒரு பையன் ஒரு பொண்ணு இருக்காங்க
இரண்டு குழந்தைகளா என்று தன் குண்டு விழிகளை விரித்தவளிடம்
ஆமா ட்டுவின்ஸ், பார்க்குறியா என்றவன் தன் அலைபேசியில் உள்ள புகைப்படங்களை காட்டினான்.
இரண்டு குழந்தைகள் போட்டாவும் அடுத்தடுத்து வர ஒரு ஐந்து போட்டா நகர்த்தியதும் ஸ்வேதா தன் குழந்தைகளோடு சிரித்து கொண்டு இருந்தாள்.
இரண்டு வருடத்திற்கு முன்பு பார்த்த ஸ்வேதாவிற்கும் இப்போது பார்க்கும் ஸ்வேதாவிற்கும்