சிறுகதை - என் கடமை முடிந்தது! - ரவை
" இதோ பார், பிரபா! எங்கப்பா, எங்கம்மா சொன்னாலே, நான் கேட்கமாட்டேன்! என்னை திருத்தணும், உன் வழிக்கு கொண்டுவரணும்னெல்லாம் கனவு காணாதே! உனக்கொரு உத்தரவாதம் தரேன்! உனக்கு ஒருநாளும் துரோகம் செய்யமாட்டேன், உன் சாப்பாடு, துணிமணி, சௌகரியங்கள் எதுக்கும் குறை வைக்கமாட்டேன்! உன் சுதந்திரத்திலே குறுக்கிட மாட்டேன்! அதேபோல, என் சுதந்திரத்திலே யார் தலையிட்டாலும், எனக்கு பிடிக்காது! நான் என்வழி, நீ உன்வழி! என்னை உனக்கு பிடிக்கலேன்னா, வெளிப்படையா சொல்லிடு! இப்பவே, விடுதலை பத்திரத்திலே கையெழுத்து போட்டுத்தரேன், சரியா?...."
இந்தக் குரல் ஒரு புறத்தில் இடிக்க, மறுபுறத்தில், கல்யாணம் முடிந்து பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு கிளம்பும்போது, கூடப் பிறந்த அண்ணன் கூறியது அலை மோதியது.
" பிரபா! நம்ம அப்பா கண்ணை மூடியபோது, இந்தக் குடும்பத்திலே நான் மட்டுமே மேஜர்! நீயும் மற்ற தங்கைகளும் வயதுக்கு வரலை!
உங்களை நம்ம அப்பா என் கையிலே பிடிச்சுக் கொடுத்து, இவங்களை எப்படியாவது கரையேற்றிடுப்பா!ன்னு சொன்னார்.
நானும் பல கஷ்டங்கள் பட்டு, எப்படியோ இன்னிக்கி ஒருத்தனுக்கு உன்னை மனைவியாக்கிட்டேன். இத்தோடு, உன்னை கரையேற்றுகிற கடமை எனக்கு முடிந்தது. இனி, மற்ற தங்கைகளை கரையேற்றுகிற வேலையை பார்க்கணும், அது முடிந்து எனக்கு ஒரு வாழ்க்கையை தேடிக்கணும், அம்மாவையும் கவனிச்சிக்கணும், சரியா?
அதனாலே, உனக்கு உன் புருஷன் வீட்டிலே, நல்லதோ, கெட்டதோ என்ன நேர்ந்தாலும், நீ அங்கேதான் காலம் தள்ளணும். இங்கே திரும்பி வர நினைப்பே கூடாது, ஞாபகம் வைச்சுக்க!"
அண்ணன் சொன்னதிலே ஒரு சொல்கூட தவறில்லை! அவருடைய சராசரி வருமானத்திலே, குடும்பத்தை நடத்துவதே கஷ்டம்! இதிலே தன் கல்யாணச் செலவுக்காக ஏற்பட்ட கடனைவேறு திருப்பித் தந்தாகவேண்டும்.
தனது திருமணத்தை நடத்தும் எந்தவிதமான எண்ணமும் இல்லாத நேரத்தில், அது அவர்மேல் திடீரென திணிக்கப்பட்டது!
பிரபாவை கடைத்தெருவில் பார்த்த இருவர், அவள் வீடு தேடிவந்து, அவள் அண்ணனிடம் பேசினர்.
" தம்பி! நாங்க சிதம்பரத்தில் வசிக்கிறோம். எங்க ஒரே மகன் இந்த ஊரிலே வேலை பார்க்கிறான். நல்ல வேலை. நல்ல சம்பளம். உங்க தங்கையை கடைத்தெருவிலே பார்த்தோம். அவள் ரொம்ப அழகாயிருக்கா! எங்க மகனுக்கு அவளை கல்யாணம் செய்துவைத்தால், அவன் அவள் அழகிலே மயங்கி, வீட்டோடு ஒழுங்கா இருப்பான். என்ன சொல்றே? வரதட்சணை,