நகைநட்டு, சீர்செனத்தி எதுவும் வேண்டாம், கல்யாணம் செய்து கொடுத்தால் போதும்! என்ன சொல்றே?"
" என் பெயர், தண்டபாணி! நீங்க வீடு தேடி வந்து பெண் கேட்கிறது, கடவுளே உங்களை இங்கே அனுப்பித்ததுபோல இருக்கு! ஆமாம், பேச்சோடு பேச்சா, உங்க மகனுக்கு என் தங்கையை கல்யாணம் செய்துவைத்தால், அவன் ஒழுங்காயிருப்பான்னு சொன்னீங்களே, அப்படின்னா இப்ப அவர் ஒழுங்கா இல்லையா?"
" தண்டபாணி! அவன் வேலைக்கு ஒழுங்கா போறான், நிறைய சம்பாதிக்கிறான், ஒரு கெட்ட பழக்கம் கிடையாது, வீடு வாங்க, நிறைய பணம் சேர்த்து வைத்திருக்கான்...."
" பின்னே ஏன் அவரை, ஒழுங்காயில்லேங்கிற மாதிரி, சொல்றீங்க?"
" அதுவா? தம்பீ! சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்தே, அவனுக்கு சமூகத் தொண்டு செய்யணும்னு ஆசை! அது இப்ப விசுவரூபம் எடுத்திருக்கு! ......"
" அப்படின்னா?"
" விவரமா சொல்றேன்! அவன், ஆபீஸிலே உள்ள தொழிற்சங்கத்துக்கு அவன்தான் செகரடரி! எப்ப பார்த்தாலும், கோரிக்கை, ஆர்ப்பாட்டம், மீட்டிங், ஸ்டிரைக்னு தீவிரமா இருக்கான், அது போதாதுன்னு, இப்ப கொஞ்சநாளா சமூக பிரச்னைகளுக்காக மாணவர்களோடு சேர்ந்துகொண்டு, தீவிரமா தெருவிலே இறங்கி போராடறான், போலீஸ் அவனை கண்காணிக்கிறாங்க, அவங்கதான் எங்களை சிதம்பரத்திலிருந்து இங்கே வரவழைத்து, விவரமா சொல்லி அவனை கொஞ்சம் அடக்கிவையுங்க, இல்லேன்னா கைது செய்யும்படியா ஆயிடும்னு எச்சரிக்கிறாங்க! என்ன பண்றதுன்னு தெரியாம கடைத்தெருவிலே போய்க் கொண்டிருந்தபோது, உங்க தங்கையை பார்த்தோம். அவ அழகிலே நாங்களே மயங்கிட்டோம். அதனாலே, அவளை என் மகனுக்கு கட்டிவைச்சுட்டா, அவன் வெளியிலே வம்புதும்புக்கு போகாமல், வீட்டோட கிடப்பான், எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு! அதனாலேதான், அவள் பின்னாலேயே வந்து வீட்டை கண்டுபிடிச்சோம், தம்பீ! எதையும் மறைக்காம சொல்லிட்டோம். சரின்னு சொல்லுப்பா!" என்று கைகூப்பி கெஞ்சாத குறையா கேட்டபோது, பிரபாவின் அம்மாவும் அண்ணனும் சம்மதம் தெரிவித்தனர்.
மின்னல் வேகத்தில், அவர்கள் மகனை அழைத்துவந்து பிரபாவை அவனுக்கு அறிமுகம் செய்துவைத்து, அடுத்த ஒரு மாத அவகாசத்தில் அவன் பிரபாவின் கழுத்தில் ஒரு சுப முகூர்த்தத்தில் தாலியும் கட்டினான்.
எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தபோது, கல்யாணத்தன்று மாலையே, பொதுக்கூட்டம் ஒன்று விழாவாக கூட்டப்பட்டு அதில் பெரிய பெரிய தொழிற்சங்க தலைவர்களும், சமூக போராட்டத்