" வள்ளி! பார்த்தியா? இதுக்குத்தான் நான் பயந்தேன். இப்ப என்ன செய்வது?"
" நம்ம ஓனர் ரொம்ப நல்லவருங்க! அவரை தனியா கூப்பிட்டு நம்ம நிலமையை சொல்லுங்க!"
அதை கேட்டுக்கொண்டே, ஓனர் உள்ளே நுழைந்தார்.
" மாரிசாமி! வாடகையை அதிகரிக்காமல் இருக்க, ஒரு வழியிருக்கு! அதை எப்படியாவது செய்தேன்னா, நீ இதே வாடகையிலே எத்தனை வருஷம் வேண்டுமானாலும், இந்த வீட்டிலே இருக்கலாம்."
" சொல்லுங்கய்யா!"
" நான் தரவேண்டிய பத்து லட்ச ரூபாயை நீ சங்கத்திலே கட்டிடு, அந்தப் பணத்தை நான் உனக்கு, நீ எப்ப வீட்டை காலி பண்றியோ, அப்ப உனக்கு திருப்பி தந்துடறேன், யோசித்து முடிவு எடு!"
"ரொம்ப சந்தோஷங்க! முயற்சி பண்றேன்......"
" யாராவது ஏதாவது சொல்லி, தடுக்கப் பார்ப்பாங்க! நீ எத்தனை வருஷம் வேணுன்னாலும், தொடர்ந்து இருக்கலாம்னு நான் சொன்னதை மறந்துடாதே!"
" புரியுதுங்க, ஐயா!"
" எத்தனை வருஷம் வேணும்னாலும் , இதே வாடகையிலே இருக்கலாங்கிறதை மறந்துடாதே! நீ இப்பவே காலி பண்ணினா, எனக்கொண்ணும் நஷ்டமில்லே, வாடகையை இரட்டிப்பாக்கி கறந்துடுவேன், நீ நான்னு போட்டி போட்டுண்டு வருவாங்க, இந்த இடத்துக்கு! ஏன்னா, இந்த இடம் ஷஹர்! பஸ், ரயில், கடைத்தெரு, கோவில், பள்ளிக்கூடம், காலேஜ்