அவள்மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து கொளுத்திவிட்டு, மறைந்துவிட்டான்'
6ம் பக்கம்:
'கல்லூரி பெண் விரிவுரையாளர், தன் மாணவிகளிடம், ஆபாசப்படங்களை காட்டி, அவர்களை தவறான முறையில் வி.ஐ.பி.களுக்கு விருந்தாக, வைப்பது தெரியவந்துள்ளது.'
7ம் பக்கம்:
'ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற
நீதிபதி, சில ஆண்டுகளுக்குமுன், தன்னிடம் பயிற்சி பெற்றுவந்த பெண் வழக்கறிஞர்களிடம், நெறி தவறி நடந்துகொண்டதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது பகிரங்கமாக சொல்கிறார்கள்.'
இப்ப புரியுதா? காரணம் தெரிஞ்சுதா?
இது மட்டுமா? சினிமா துறையிலே, நடிப்பைவிட இந்த தொழிலே சிறப்பாக நடக்கிறதாமே!
தியேட்டர்களிலே, கடற்கரையிலே, ஏன் கோவில் திருவிழாக்களிலேகூட, தற்காலிக ஜோடிகள் சேருகிறார்களாமே!
அதனால், விடுதிகளை தேடி வருகிறவர்கள் அருகிவிட்டார்கள்!
எங்க பிழைப்பிலே மண்! இந்த உண்மை புரிந்தோ, புரியாமலோ, எங்க வியாபார முதலீட்டாளர்கள், எங்களிடம் குற்றம் கண்டு எங்களுக்கு சம்பளம் தர மறுத்து, எங்களை பட்டினி போடுகிறார்கள். இதென்ன நியாயம்?
எங்களை தேடி வராதவர்களை, நாங்கள் தெருவில் நின்று கூவி அழைத்துவந்து அவர்களிடமிருந்து பணம் பறிக்கணுமாம். இதென்ன நியாயம்?னு பதில் பேசமுடியுமா? அவ்வளவுதான்! அடுத்த வினாடியே கையிலே விலங்கு மாட்டி 'உள்ளே' தள்ளிடுவாங்க! ஏன்னா, அவங்களுக்கு காவல்துறையிலே, அமைச்சரவையிலே, நிர்வாகத்திலே, நீதித்துறையிலே, செல்வாக்கு அதிகம்!
இப்போது புரிந்ததா, எங்கள் வியாபார முதலீட்டாளர்கள் யார்னு!
இப்ப சொல்லுங்க!
'நாளும் இங்கே ஏகாதசி'ன்னு பாடல் புனைந்ததிலே என்ன தவறு?
யாரோ வருகிறமாதிரி தெரியுது, அப்புறமா உங்களிடம் பேசறேன்!
வந்தது ஒருவரல்ல; மூன்றுபேர்! அனைவரும் விடுதியில் நடக்கும் வியாபாரத்தின் முதலீட்டாளர்கள்!
" இந்த வீட்டின் சொந்தக்காரன், வீட்டை உடனடியா காலி பண்ணச் சொல்லிட்டான். அவரை விரோதிச்சிண்டா, எங்களை 'உள்ளே' தள்ளிடுவார். அதனாலே, ஒருத்தர் விடாம அத்தனை