என்னை முன்னே, பின்னே பார்க்காமலே, எனக்கு கிட்னிதானம் செய்து எனக்கு மறுபிறவி தந்தானேங்கற ஒரு விசுவாசம்!
அவன் அன்று அந்த உதவி செய்திருக்கலேன்னா, நிச்சயமா நான் அன்றே போய் சேர்ந்திருப்பேன், வைகுந்தம்!
அதிலே சந்தேகமே இல்லை! தெய்வமே அவனை அனுப்பி எனக்கு உயிர்ப்பிச்சை போட்டாரு!
நல்லவேளை! அந்த நேரத்திலே, அந்த சீமான் எந்த சாதிங்கறது, எங்கப்பா, அம்மாவுக்கு தெரியாம போயிடுத்து! தெரிந்திருந்தால், நான் செத்தாலும் பரவாயில்லே, அவன் கிட்னி என் உடம்பிலே வைக்கக்கூடாதுன்னு தடுத்து இருப்பாங்க, அவங்க அவ்வளவு சாதிவெறி பிடிச்சவங்க!
அவனை தலைமுழுகித் தொலைக்கலாம்னா, முடியலியே!
திரும்பத் திரும்ப அவன் நெனப்பே, மனசிலே வந்து வந்து நிக்குதே!
ஒருவேளை, என் க்ளாஸ்மேட் நித்யாவை 'டாவு' அடிக்கிறானோ!
இருக்காதே, இருக்கமுடியாதே! ஏன்னா, அவ என்னைவிட நிறம் கம்மி! அவளுக்கு என்னைப்போல, பிரமாதமா பாடத் தெரியாது, அவங்கம்மா ஒரு அட்வகேட்! எங்கப்பாவைப்போல, மில் ஓனரில்லே! அவ என்னைவிட குள்ளம்!
இதெல்லாவற்றையும்விட, அவ என் உயிருக்குயிரான தோழி! ரெண்டு பேரும் ஒண்ணாங் கிளாஸிலே இருந்து டிகிரி வரையிலும், ஒண்ணா படிச்சவங்க!
ஒருநாளும் அவ எனக்கு துரோகம் செய்ய மாட்டாள். தவிர, அவளுக்குத் தெரியுமே, நான் அவனை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறது!
எனக்கு தெரிந்து அவள், அவனுடன், அதிகமா பேசினதே கிடையாதே!
வேற எதனாலே, என்னை கை கழுவிட்டான்?
ஒருவேளை, அந்த டாக்டரோட மகள் நிருபமாவை லவ் பண்றானோ?
அவளோட, அவன் அதிகமா பழகவேயில்லையே!
ஆனா, அவளுக்கு அவன்மீது ஒரு 'இது' உண்டு, வெளிப்படையாவே என்னிடமே சொல்வாளே, அவள் அப்பா-அம்மாவுக்கும் அவனை மருமகனாக்கிக்க விருப்பம்னு ஓபனா, சொல்லிட்டாங்களே!
அவளும் என்னளவு 'கலர்', எனக்கு ஈடா பாடுறா, என்னளவு படிச்சிருக்கா, என் உயரம் இருப்பா!
எனக்கு போட்டி யாராவது இருக்கமுடியும்னா, அது அவள்தான்!