(Reading time: 9 - 18 minutes)

பார்த்திருக்க மாட்டாங்க!

 அவன் சொல்றான்,

 ' மகாவுக்கே தெரியுமோ, தெரியாதோ, நான் அவளை 'லவ்' பண்றேன், சின்சியரா அவள் வாழ்க்கையிலே பெயரும் புகழோடும் வாழணும்னு ஆசைப்படறேன், அதுதான்

உண்மையான 'லவ்'! அவளை நான் கல்யாணம் செய்துண்டு என் மனைவியாக்கிக்க ஆசைப்படறது, என் சுயநலம்!

 'லவ்' என்ற சொல்லை, தவறாக புரிஞ்சிக்கிறாங்க! மகாமீது அவளை பெற்றவங்களுக்கும், சகோதரனுக்கும் இருப்பது, 'லவ்'! ஒரு மனிதன் இன்னொருவனை நேசிப்பது, 'லவ்'! அப்படித்தான் நானும் மகாவை 'லவ்' பண்றேன்!

 அவளுக்கு எது நல்லதுன்னு நினைச்சு, அதை அவள் அடையணும்னு நான் ஆசைப்படறதுதான், உண்மையான காதல்!'

 எப்படி போட்டான், பார்த்தீங்களா, அதிர்வேட்டு!

 எங்கப்பா, அம்மாவே மயங்கிட்டாங்க!

 அவன் முதல் நம்பர் ஃபிராடு! எவ்வளவு அழகா, என் கழுத்தை வெட்டிட்டான்,

பார்த்தீங்களா? அப்பப்பா!

 ஒருவிதமா பார்த்தால், அவனை மறக்கறது நல்லதுகூட! இப்பேர்ப்பட்ட, ஜகஜால புரட்டனோட எப்படி நிம்மதியா வாழமுடியும்? நீங்களே சொல்லுங்க!

 சொல்ல மறந்துட்டேனே, நேற்று நித்யா என்னை மீட் பண்ணி விவரமா பேசினா! 'மகா! நீ ஆசைப்பட்டவனை, உனக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், நான் ஒருநாளும் கட்டிக்கமாட்டேன், இது உறுதி'ன்னு சொன்னா!

 அதனால, எனக்குப் போட்டி, இப்ப களத்திலே நிக்கறது, அந்த டாக்டர் பொண்ணு நிருபமாதான்!

 அங்கே என்ன நடக்கறதுன்னு அப்பப்ப தெரிஞ்சிக்க, சுந்தரியிடம் சொல்லிட்டு வந்திருக்கேன்!

 அவகூட சொன்னா,

'அவன் ஒண்ணும் பெரிய மன்மதனில்லே, காலுக்கு உதவாத செருப்பை கழற்றி எறியறாப்பல, அவனை மனசைவிட்டு தூக்கி எறி'ன்னு சொன்னாள்.

 நானும் அந்த ஃபிராடை மறக்கத்தான் பார்க்கிறேன், முடியலியே!

 "மகா! என்ன தலையை பிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கே! பி சியர்ஃபுல்! சந்தோஷமாயிரு!"

 திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். சீமான்!

 உண்மையா? உடம்பை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன், வலித்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.