கொண்டுவிட்டனர்.
அவருடைய மனைவி, வீடு வீடாகச் சென்று வேலை கேட்டும், கிடைக்கவில்லை!
காரணம், அவர்களுடைய மாதசம்பளம், நின்றுவிட்டது!
இந்த மூன்று மாதங்களில், வீட்டுவேலைகளை தாங்களே செய்துகொள்ளவும் பழக்கம் வந்துவிட்டது!
குடும்பங்கள், தாங்களே தங்கள் துணிகளை இஸ்திரி போட பழகிக்கொண்டுவிட்டதால், தெருவில் ஓரமாக கடைவைத்து, இஸ்திரி போட்டு சம்பாதித்த தொழிலும் காணாமல் போய் விட்டது!
தியேட்டர்களுக்கு மக்கள் வர பயப்படுவதால், அவைகளும் மூடப்படும் நிலை உணர்ந்த அந்த தொழிலாளர்கள், வேறு வேலை தேடுகின்றனர்!
முடிதிருத்தகங்களில் மக்கள் வரப் பயப்படுவதால், வீட்டிலேயே கணவனுக்கு மனைவி அந்த முடிவெட்டுதலை செய்கிறாள்!
ஓட்டல்களுக்கும் இதே நிலை! அவர்களும் விழி பிதுங்கி நிற்கிறார்கள். குறைந்தது, மூன்று வருஷங்கள், நஷ்டமே!
பணப்புழக்கம் குறைந்து விட்டதால், நகை, ஜவுளி, மளிகைக்கடைகள் யாவுமே, விழிக்கின்றன.
" ஐயா! இதென்ன கொடுமை? உங்களுக்கா இந்த நிலை? ஆமாம், நேரே என்னிடம் மட்டும் வந்து பிச்சை கேட்கிறீர்களே, ஏன்?"
" நான் உன்னிடம் கேட்கிற பிச்சை, காசுபணம் அல்ல, இந்தத் தொழிலில் பயிற்சி! எனக்கு அந்தக்கலை தெரியாத காரணத்தால், எவரும் எனக்கு பிச்சை போட மறுக்கிறார்கள்......"
பிச்சைக்காரன் முத்து, தனகோடியை ஓரமாக நிறுத்தி, "நீங்க அந்த டீக்கடைக்குப் போய் இருங்க! நான் வரேன்......"
சிறிது நேரத்தில், முத்து அங்குவந்து, அவருக்கு டீயும் பன்னும் வாங்கித்தந்து தானும் சாப்பிட்டான்.
" ஐயா! இந்தத் தொழில் உங்களுக்கு சூட் ஆவாது, யோசனை பண்ணி வேற தொழில் சொல்றேன், பொறுமையா இருங்க!"
" உனக்கு இங்கிலீஷ் தெரியுமா, 'சூட்'னு சொல்றே!"
" அது இங்கிலீஷா? தெரியாதே! மெட்ராஸ் தமிழ்!"
"உன் ஒருத்தனுக்கே உனக்கு வர பணம் போதாதே எனக்கு வேற வாங்கித்தரியே எப்படி?"
" ஐயா! என்னிடம் லட்ச ரூபாய்க்கு மேலே இருக்கு! கொள்ளை அடிச்சதில்லே, பிச்சையிலே கிடைச்சதுதான்........"
" நம்ப முடியலியே!" " நம்ம சனங்களுக்கு தர்ம சிந்தனை உண்டோ, இல்லையோ, இந்த ஒரு