எனக்கு நிஜமாவே அவங்க பேச்சு, அழகு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்குடா!"
" சரி, உங்கப்பாவிடம் நான் என்ன சொல்லணும்?"
" நாம ரெண்டுபேரும் சேர்ந்து, ரிசர்ச் பண்ணி, இந்த கொரோனாவுக்கு நல்ல மருந்து கண்டுபிடித்து உலகப் புகழ் அடையணும்னு ஆசை! அதை நீ அவரிடம் அழுத்தமா எடுத்துச்சொல்லி, அவர் மனசை மாற்றணும்!"
"ஐ வில் டூ மை பெஸ்ட்!" இருவரும் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்த, சுகுமாரியின் தந்தை முகம் மலர்ந்தது!
அவருக்கு மகேஷை முன்பே தெரியும், பிடிக்கும்! " வா வா மகி! எப்படி இருக்கே? ரொம்ப நாளாக இந்தப் பக்கம் வரவேயில்லை, உங்களுக்குள்ளே ஏதாவது மனஸ்தாபமா?"
" அங்கிள்! கனவிலேகூட எங்களிடையே மனக்கசப்பு வராது. வீ ஆர் குட் ஃபிரெண்ட்ஸ்! எங்க படிப்பு எங்க முழுநேரத்தை விழுங்கி ஏப்பம் விடுது! அங்கிள்! இந்த உலகம் சீக்கிரமே உங்களை ஒரு நோபல் பரிசு வின்னரின் அப்பான்னு புகழப்போகுது, ஆச்சு, ரெண்டு வருஷந்தான்! முடிந்தால், இன்னும் சீக்கிரமே எங்க ரிசர்ச்சை முடிக்கப் பார்க்கிறோம், எங்க ரிசர்ச் எதைப்பற்றி தெரியுமா அங்கிள்? கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது......"
" வாவ்! உலகமே உங்க ரெண்டு பேரையும் வாழ்த்தும்!"
" அதனாலே, ப்ளீஸ், ஒரு ரெண்டு வருஷம் பொறுத்து சுகி கல்யாணத்தை நடத்த நீங்க ஒப்புக்கணும்......"
" சுகி! மகிக்கு குடிக்க ஒண்ணும் தரலியா?"
சுகுமாரி உள்ளே போனதும், அவள் தந்தை மகேஷை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.
" மகி! இப்ப சொல்லப் போவதை, சுகியிடம் சொல்லாதே! எனக்கு ப்ளட் கேன்சராம்! திடீர்னு தெரிஞ்சு டாக்டர், நான் அதிகநாள் உயிர் வாழறது கஷ்டம்னு சொல்லிட்டார், இப்ப நீயே சொல்லு!
அவளுக்காகவே வாழற நான், அவளுக்கு கல்யாணம் செய்துவைக்காமல் போக முடியுமா?"
"அங்கிள்! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே, அதிர்ச்சியாக இருக்கு! தயவுசெய்து இதை சுகியிடம் சொல்லாதீங்க! அவள் தாங்கமாட்டாள்..."
" இப்ப நீ சொல்லு! இதை எப்படி சமாளிக்கிறது?"
" ஒரே ஒரு வழி இருக்கு அங்கிள்! சுகிக்கு கணவனா வரப் போகிறவனை அவ மேல் படிப்புக்கு தடை சொல்லாத ஒருவனா தேர்ந்தெடுங்க!"
" எக்ஸலெண்ட்! டன்!" இருவரும் வீட்டுக்குள் வந்தனர்.