" சுகி! உன் தோஸ்த் ரொம்ப க்ளெவர்! நீ மேலே படிக்க என்னை சம்மதிக்க வச்சிட்டான்....ஓ.கே.யா?"
சுகுமாரி ஓடிவந்து, தன் தந்தையை அணைத்து முத்தமிட்டாள்.
" சுகி! நீ உன் வேலையை கவனி! நான் மகி யை அவன் வீட்டிலே டிராப் பண்ணிட்டு, என் வேலையை கொஞ்சம் பார்த்துவிட்டு வரேன்!"
சுகுமாரி, மகேசனுக்கு கண்களால், நன்றி கூறினாள்.
சுகுமாரியின் தந்தை நேரே, மகேஷின் தந்தையின் கடைக்கு காரை ஓட்டினார். மகேஷுக்கு ஒன்றும் புரியவில்லை.
மகேஷை காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, அவர் மட்டும் இறங்கி மகேஷின் தந்தையிடம்பேசி, அவரையும் தன் காரில் ஏற்றிக் கொண்டு, மகேஷின் வீட்டுக்கு வந்தார்.
" வணக்கம்மா! நல்லா இருக்கீங்களா? நான் உங்க மகேஷின் ஃபிரெண்டு சுகியின் அப்பா! உங்களுடன் பேசிட்டு போகலாம்னு வந்தேன்....."
" வாங்க, வாங்க! உட்காருங்க! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு....."
" இனிமே சந்தோஷமான விஷயம் நிறைய நடக்கப் போகுது, நீங்க சம்மதித்தால்! என்ன சொல்றீங்க?"
" மகேஷ் அப்பாவின் சம்மதம்தான் என் சம்மதம்! சுகியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ஸ்வீட்டா பேசறா, மகேஷின் ஃபிரெண்ட்! சொல்லுங்க!"
" சுகிக்கும் மகிக்கும் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை பண்ணிவச்சி, மகியை என் மருமகனாக்கிக்க ஆசைப்பட றேன், என்ன சொல்றீங்க?"
" உங்க ஆசை நிச்சயம் நிறைவேறும், ஆனா சுகி மேலே படிக்க ஆசைப்படறா"
" அவ, இனி உங்க வீட்டு மருமகள்! அவளை படிக்க வைக்கிறது, உங்க பிரியம்!"
சுகியின் தந்தை மகியை தனியே அழைத்துச் சென்று, ஒரு வாக்குறுதி கேட்டார்.
" என் உயிர் ஊசலாடுவது, சுகிக்கு சொல்லிடாதீங்க!"
மகேசன், அவரை அணைத்து கண்ணீர் விட்டான்!
அடுத்த முகூர்த்தத்தில் இனிதே நடந்தது, மகி-சுகி திருமணம்!
மகேசன், ஒரு கோடீஸ்வரனின் வாரிசானான்!
" அம்மா! அப்பாவை நீ, எதையோ இழந்துட்டார்னு புலம்புவியே, இப்ப என்ன சொல்றே? அப்பாவின் நல்ல குணத்துக்கு ஆண்டவன் தந்த பரிசு, சுகி என்கிற சுகுமாரி!"