நினைக்கிறே?" என்று கேட்டான். " பெண்ணின் பெயரைக் கேட்டதுமே, என் வயிற்றிலே புளியைக் கரைத்ததுங்க!"
" ஏன்டீ, சீதாராமன் என்பது நல்ல, மங்களகரமான பெயர் தானே?"
" ராமாயணத்திலே, முக்கால் பகுதி, சீதையும் ராமனும் சேர்ந்தே வாழலே, முதல்லே அசோகவனம், பிறகு நிறைமாத கர்ப்பிணியா காட்டிலே தனிமை!
பல வருஷங்கள் மரவுரி, காட்டிலே கால்நடை, பிறகு அக்னி பிரவேசம், லவகுசன் பிறந்தபிறகு ராமனுடன் ஒரு நாள்கூட சேர்ந்து வாழலே!
ராமனும் நாட்டிலே ராஜாவா இருந்தானேதவிர, மனைவியில்லாம, சோகமா இருந்தான்........"
" ராதா! நீ சொல்றது, நடைமுறையிலே, சரியான்னு பார்ப்போமா? நம்ம உறவுக் காரங்களிலே, 'சீதா'ன்னு பெயர் உள்ளவங்க, எப்படி இருக்காங்கன்னு யோசி!"
" நீங்க புரிஞ்சிக்கலே, 'சீதா'ங்கிற பெயர் உள்ளவங்க, 'ராமன்'என்கிற ஆணுடன் சேரும்போதுதான், இந்த சோகம்! தனித்தனியா இருந்தா, பாதகமே கிடையாது!"
" இப்ப, என்ன பண்றது? என் பிரமோஷன், சிவா கையிலே இருக்கே!"
" ஏங்க, உங்க மகன், வாழ்க்கை முக்கியமா, உங்க பிரமோஷன் முக்கியமா?"
" அதுவும் சரிதான்..."
" சிவாவிடம் ஏதும், நீங்களா பேசாதீங்க, அவர் என்ன சொல்றார்னு பார்த்து, சமாளிப்போம்......"
"ஜாதகப் பொருத்தம் இல்லைனு சொல்லிடுவோம்."
" அதையும் நீங்க முதல்ல சொல்லவேண்டாம், அவங்க என்ன சொல்றாங்கன்னு, பார்ப்போம்......"
இருதலைக் கொள்ளி எறும்பாக, கண்ணன் மருட்சி அடைந்தார்.
இரவு முழுவதும், அவர் புரண்டு புரண்டு படுத்ததைப் பார்த்த, ராதாவுக்கும் மனசு கஷ்டப்பட்டது.
பொழுது விடிந்தது. கண்ணனுக்கு ஒரு யோசனை, ராதாவை அழைத்துப் பேசினான்..
" ராதா! எதற்கும், நம்ம ஜோசியர் சுந்தரத்திடம் கேட்போமா?"
" உங்க பிரமோஷன் இன்னிக்கு இல்லேன்னாலும், ஒருநாள் கிடைக்கும். ஆனா, நம்ம பிள்ளை வாழ்க்கை, போனா வருமா? வேண்டாம், விஷப்பரீட்சை!மறந்துடுங்க!"
வேறுவழியின்றி, ஜே.கே. தலையை தொங்கப் போட்டுக்கொண்டு ஆபீஸில் நுழைந்தார்.
அப்போது, பிரேம் மிக மகிழ்ச்சியுடன், வெங்கியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
" என்ன பிரேம்? வெங்கி என்ன சொல்றான், ரொம்ப குஷியா இருக்கே!"
" ஜே.கே.! உனக்குத் தெரியுமோ, வெங்கி நல்லா ஜோசியம் பார்ப்பான், என் ஆஸ்தான ஜோசியர் அவனே!