வேணும்னாலும் பறிச்சுக்க தோதா, ஓபனாத்தானே வச்சிருக்காரு, முட்டாள் பெரியவங்க! தாத்தா! நான் சின்னவனாவே இருந்துடறேனே!"
" புராணங்களிலே, ஒரு சிறுவன், மார்க்கண்டேயன்னு பேர், அவன் என்றும் பதினாறு வயசாகவே இருந்தான்..."
"அதெப்படி அவன் மட்டும்.......?"
" கடவுளை வேண்டிக் கேட்டான், அவர் தந்தார்!"
" நானும் கடவுளை கேட்கறேன், தாத்தா!"
"குமரா! சின்னவனோ, பெரியவனோ, நல்லவனா இருக்கணும்னு வேண்டிக் கொள்!"
பேரன் குமரன் நகர்ந்ததும் தாத்தா பெருமூச்சு விட்டார்.
இப்படித்தானே, அந்தக் காலத்தில், என் மகள் மேனா, மகன் லேனாவும் இந்த மாதிரி என்னை சுற்றி சுற்றி வந்தார்கள்?
இப்போதோ, என் முகம் பார்ப்பதைக்கூட வெறுக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள்.
என்ன காரணம்? பணம்! அவர்கள் கேட்கும்போது பணம் கொடுத்தால் நல்லவன் நான்! ஒரே ஒரு முறை 'இல்லை' என சொன்னாலும், விரோதி ஆக வெறுக்கிறார்!
இப்படி தாத்தா கடந்த காலத்தை அசை போட்டார்.
நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது, பார்ப்போமா?
அவருடைய மூத்தமகன் முரளியுடன்தான் வசிக்கிறார். அடுத்தவன் லேனாவும், மகள் மேனாவும் அடுத்த தெருவில் வசிக்கிறார்கள்.
மூவரையும் பெற்றவள், மகாலட்சுமி, சுமங்கலியாக சொர்க்கம் சேர்ந்து வருஷம் பத்து ஓடிவிட்டது!
அவள் இருந்தவரை, வந்து போய்க் கொண்டிருந்த லேனாவும், மேனாவும், அதன் பின், எட்டிக்கூட பார்ப்பது இல்லை!
அவர்களுக்கு தந்தை யின் மீது என்ன கோபம்?
மகாலட்சுமி மறைந்த பதினைந்தாம் நாள்!
மகாலட்சுமியின் நகை, பட்டுப் புடவைகளை மூவரும் பங்கு போட்டுக் கொள்ள, தயாரானபோது, தாத்தா, தன் மனைவி சொல்லிவிட்டுப் போனதை தெரிவித்தார்.
" உங்கம்மா, என்னிடம் சொல்லிவிட்டுப் போனதை சொல்றேன்,
'மூத்த மகன் முரளியும் அவன் மனைவி வாணியும், இதுவரை நம்மை கண்ணில் வைத்து காக்கிறார்கள். லேனாவோ, மேனாவோ, ஒரு நாள்கூட நம்மை அழைத்து சோறு போட்டதில்லை!
இதுதான் உண்மை! ஏன் நம்மை புறக்கணித்தார் என்பது, அவர்கள் அறிந்ததே!