உங்களை இறுதிவரை முரளியும் வாணியும் தங்களுடன் வைத்து பார்த்து கொள்வார்கள் என்பது உறுதி!
மற்ற சொத்து, பணத்தை யார் யாருக்கு எவ்வளவு தரணும்னு நீங்க முடிவு பண்ணிக்குங்க!
ஆனா, என் நகைகள் பட்டுப் புடவைகள் எல்லாம் வாணிக்கே தரணும் என்பது என் ஆசை! அதை நீங்க நிறைவேற்றணும்.....' னு உங்கம்மா தெளிவாகச் சொல்லிட்டு போயிருக்கா, அதனாலே, அம்மாவின் நகை புடவைகள் எல்லாம் வாணி எடுத்துக்கட்டும்!"
அன்று, திரும்பிக்கூடப் பார்க்காமல் போன, மேனா, லேனா இருவரும், இதுவரை தங்கள் தந்தையின் நலம் பற்றி விசாரித்ததுகூட, இல்லை!
அவ்வளவு கோபம்! ஏன்? அம்மாவின் நகைகளில், அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய பங்கின் மதிப்பு, வெறும் ரெண்டு லட்சம்!
பைத்தியங்கள்! வெறும் ரெண்டு லட்சங்களுக்காக, இதர சொத்துக்களிலும் தன் பங்கை இழந்தால், அதன் மதிப்பு பல லட்சங்கள்!
இந்த எளிய உண்மை, ஏன் அவர்களுக்கு தெரியலே!
" முரளி! வாணி! ரெண்டு பேரும் வாங்க!"
" என்னப்பா சொல்லு!"
" இன்னிக்கு நியூஸிலே சொல்றான், இந்த கொரோனா வியாதி பயத்தில், வயசானவன், ஆகாதவன்னு வித்தியாசமில்லாம, எல்லா குடும்பத் தலைவர்களும் உயில் எழுதி, பதிவு செய்ய ஆரம்பிச்சுட்டாங்களாம், எனக்கோ எண்பது வயதாகி விட்டது....நானும் உடனே உயில் எழுதிடறேன், வக்கீல் வேணுமா, நானே எழுதட்டுமா?"
முரளியும் வாணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்!
" அப்பா! ஒரு விஷயம்! கோவிச்சிக்காம, கேளு!"
" சரி, சொல்லு!"
" தயவுசெய்து அம்மா செய்த தவறைப்போல, நீயும் உயில் எழுதும்போது, ஏதாவது தப்பு பண்ணிடாதே!"
" அம்மா என்ன தப்பு செய்தாள்?"
" அம்மாவும் நீயும் மேனா, லேனாவிடம், உங்களை நான் என்கூட வைத்துக்கொண்டு காப்பாத்தறேன்னு அடிக்கடி புலம்பி அவங்க வெறுப்பை வளர்த்துட்டீங்க......"
" அதுதான் உண்மை!"
" அது உண்மை இல்லேப்பா!"
" என்னடா சொல்றே?"