என்ன சொன்னார், தெரியுமா?
' மாப்ளே! என் பொண்ணையும் இந்தக் குடையையும், உங்க வாழ்வு முழுவதும், கண் கலங்காம பார்த்துக்கணும்! இந்தக் குடையை, நான் தரும் சீதனமா நினைச்சுக்குங்க'ன்னு சொல்லிக் கொடுத்தார்.
அதோடு, இன்னொரு விஷயம்! நம்பினால் நம்பு! நானும் அப்பாவும் நம்பறோம்!
ஒருநாள் உங்கப்பா ரோடிலே ஏதோ யோசனை செய்துண்டே போனபோது, எதிரே முட்டிக் கொல்லவந்த முரட்டுக் காளையை பார்க்க வில்லை!
ஆனா, இந்தக் குடை பார்த்து, கண் சிமிட்டற நேரத்திலே அந்தக் காளையின் முகத்திலே குத்தி காளையை வேற திசையிலே விரட்டியது, அன்னிக்கி அது அப்படி காப்பாற்றி யிராமல் வெறும் ஜடப்பொருளா இருந்திருந்தால், நினைச்சுப் பார், அப்பாவின் நிலையை!"
அம்மா சொன்னதுடன், ஐயா ஒரு போடு போட்டார், பாருங்க!
" ஏன்டா! குடை லொட லொடன்னு சத்தம் போடுது, அசிங்கப்படுத்துதுன்னு தூர வீசிட்டியே, அதேபோல, உன் அப்பாவும் அம்மாவும் வயசாகி தள்ளாமையிலே லொடலொடன்னு ஆயிட்டா, மூலையிலே தூக்கி எறிந்து விடமாட்டேன்னு எப்படி நம்பறது? உன் ஆட்டிட்யூடு, மனோபாவம், அதைத்தானே சொல்றது!"ன்னு போட்டார் ஒரு போடு!
அன்றிலிருந்து எனக்கு அந்த வீட்டில் தனி மரியாதை!
இறுதிவரை, ஐயாவின் கையிலே நான் இருப்பேன் என்கிற உத்தரவாதம் எனக்கு கிடைத்தது!