" நீங்க, நான் சொன்னால், கேட்கமாட்டீங்க, அம்மாவே வரட்டும் உங்களிடம் பேச!"
உடனே, அம்மாவும் வந்திறங்கினாள்.
" வரதா! பத்து வருஷம் நாங்க இதுபற்றி உன்னிடம் பேசினோமோ, இல்லை! இப்ப ஏன் திடீர்னு பேசறோம்? கடவுள் எங்க மூலமா, உனக்கு உத்தரவு அனுப்புகிறார், டாக்டரை போய் பார்க்கச் சொல்லி! உங்களுக்காக இல்லாவிட் டாலும், என் திருப்திக்காக டாக்டரை பார்த்துவிட்டு வாங்க!"
" அம்மா! உங்களை அனுப்பின கடவுள், எங்களை இன்னும் டாக்டரிடம் போகச் சொல்லலியே......."
" வரதா! விமலா! என் ஆசைக்காக, நீங்க டாக்டரை பார்க்கக்கூடாதா?"
" கட்டாயமா பார்க்கலாம், ஆனால் அம்மா! அத்துடன் அது நிற்குமா?
டாக்டர் ரெண்டு பேரை யும் டெஸ்ட் பண்ணுவார், ரிசல்ட் வந்ததும், குறை ஒன்றும் இல்லை, என்று சொல்லலாம், அல்லது, ஏதோ ஒரு குறை இருக்கு, சிகிச்சை எடுத்துக்கணும்னு சொல்லலாம், மூன்றாவதா, குழந்தை பிறக்கிற வாய்ப்பே இல்லை, அடாப்ட் பண்ணி, அனாதை குழந்தையை வளருங்கன்னும் சொல்லலாம், அப்போ நாங்க என்ன செய்யணும்னு உங்களாலே தீர்மானிக்க முடியுமா? நாங்கதானே, அதை செய்யணும்!
அதற்கு நாங்க எங்களை தயார் பண்ணிக் கொண்டபிறகுதான் நாங்க டாக்டரிடம் போவதில் பயன் இருக்கும், சரியா?
அம்மா! இப்ப நாங்க குறை இல்லாம, நிம்மதியா இருக்கோம்! அந்த அமைதி நிச்சயமா போயிடும், உங்க ஆசைக்காக டாக்டரைப் பார்த்தால்!
டாக்டரை உங்க ஆசைக்காக பார்த்துட்டு, அவர் சொல்றதை கேட்டு நடக்காமல் இருக்க முடியுமோ? முடியும்னா, வீணா போய் பார்ப்பானேன்?
யோசியுங்க, நாங்க சொல்றது சரியா இல்லையா என்று!
நாங்க எப்ப எல்லாத்துக்கும் தயாராக இருக்கிறோமோ, அப்ப டாக்டரிடம் போகலாம், சரியா?"
" சரியில்லேடா! என் வயசு, நீங்க வரும்போதுதான் உங்களுக்கு வாரிசின் அருமை புரியும்! இப்ப உங்க அண்ணன், என்னை கவனித்துக் கொள்வது போல, உங்களை உங்க வயசுக் காலத்திலே பார்த்துக் கொள்ள ஒரு நம்பிக்கையான மகனோ, மகளோ வேணும்!
விமலாவுக்கு வயது ஆக ஆக, பிரசவிப்பது கஷ்டம் ஆகிவிடும், தப்போ ரைட்டோ, எனக்காக போய் பார்த்துட்டு வாங்கடா!"
" அம்மா! எங்களுக்கு ஒருநாள் அவகாசம் கொடு! யோசிக்கிறோம், சரியா?"
" என் அபிப்பிராயத்திலே, யோசிக்க ஒண்ணுமில்லாவிட்டாலும், உங்க ஆசைக்காக