சாவியை வாங்கிக்கிட்டு பாத்ரூமுக்கு ஓடினேன்.
பூட்டைத் திறந்து, உள்ளே போய்ட்டு, பார்த்தால், உட்பக்கம் தாழ்ப்பாள் உடைஞ்சிருக்கு!
எப்படி குளிப்பது? நான் குளிக்கிறப்ப, எவனாவது நுழைஞ்சிட்டா....
ஓடிப்போய், செக்யூரிடி யிடம் சொன்னேன். அவன் என்னைப் பார்த்து பல் இளிச்சிட்டு, " சரி, நீ உள்ளே போய் குளி! நான வெளியிலே நின்னுக்கிட்டு யாரும் உள்ளே வராம கவனிச்சிக்கிறேன்..."
வேறு வழியில்லாம, பாத்ரூமுக்குள்ளே போய், துணிகளை கழற்றி பையிலே திணித்துவிட்டு, குழாயை திறந்து வாளியிலே தண்ணீர் நிரம்பியதும் குளிக்கலாம்னு காத்திருந்தபோது, " என்னை கூப்பிட்டியா?"ன்னு கேட்டுக் கொண்டு செக்யூரிடி உள்ளே வந்துட்டான், பாவி!
பதறிப் போய் கையாலே உடம்பை மறைச்சிக்கிட்டு அவனை விரட்டினேன். அவன் ரெண்டு நிமிஷம் என்னைப் பார்த்து ரசித்து சிரிக்கிறான், பாவி!
அவமானமாப் போன எரிச்சலோட, சீக்கிரமா குளிச்சிட்டு, மாற்றுத்துணி உடுத்திக்கிட்டு, பழைய துணி யை பையிலே போட்டு, சாவி யை செக்யூரிடியும் கொடுத்த போது என் பையையும் தந்து " இதை வச்சிக்க, நான் திரும்பிப் போறபோது வாங்கிக்கிறேன்" னு தலை நிமிராம பையை நீட்டினேன்.
செக்யூரிடி, பையோட என் கையை பிடிச்சிக்கிட்டு, " நான் யாரிடமும் சொல்ல மாட்டேன், நடந்ததை! தினம் நீ இங்கே குளி, சரியா? அழகா இருக்கே...." என இளித்தான்.
இந்த வெட்கக்கேடு, தேவையா?
வேலையும் வேண்டாம், அவமானமும் வேண்டாம்னு உதற முடியலியே! பச்சைக் குழந்தைங்க பசியிலே துடிக்குதே, ......கடவுளே! ஏழைங்க இந்த நாட்டிலே வாழவே முடியாதா?
" யாரும்மா நீ? எங்கே வந்தே?"
நான் பதில் சொல்லும் முன்பாம, செக்யூரிடியே பதில் சொன்னான்.
" சார்! இவங்க கிரவுண்ட் ஃபிளோர் பி பிளாக் மூணாம் நம்பர் வீட்டு வேலைக்காரி.."
" எந்த வீடாக இருந்தால் என்ன, ஓனர்கள் சங்க முடிவு எடுத்தாச்சில்லே, வெளியாள் யாரும் இன்னும் ஒரு மாசம் கட்டிடத்துக்குள்ளே நுழையக் கூடாதுன்னு, இவங்களை ஏன் உள்ளே விட்டே? வெளியே அனுப்பு, முதல்லே!"
செக்யூரிடி வேறுவழி தெரியாமல், என்னை விரட்டி னான். நல்லவேளையாக, என்னை வேலைக்கு வரச் சொன்ன மகராசன் அங்கே வந்துவிட்டார்.
" ஏன் அவளை விரட்டறே, எங்க வீட்லே வேலை செய்ய வந்திருக்கா."
" மிஸ்டர்! என்னைப் பார்த்து பேசுங்க! நான் இந்த கட்டிட ஓனர்கள் சங்கத்தின் தலைவன்.