சீலன் ஏன் அப்படிப் போனான்.
அம்மா மெல்ல மெல்ல போ¡¢லிருந்து வைக்கோலைப் பிடிங்கி இழுத்தாள். நாய் அம்மாவிடம் ஓடி வந்தது. கால்களில், 'சில்லென' இருந்த ஈரமூக்கைத் தேய்த்தது. வாலைத்தூக்கி சுழற்றிச் சுழற்றி ஆட்டியது. அம்மா காலால் எட்டி உதைக்க நினைத்தாள்.
நாயின் கண்களில் நன்றி வழிந்தது. அது சீலன் கொண்டு வந்த நாய். அம்மா அதை உதைப்பாளா? கால்களை மடக்கிக் கொண்டாள்.
'சொதசொத' வென்ற மா¡¢ காலத்தின் சோம்பலான ஒரு நாளில் சீலன் அதைத் தூக்கிக்கொண்டு வந்தான். வந்தபோது வெள்ளைநிறமாக இருந்தது. இப்போ பழுப்பு நிறமாக வளர்ந்துவிட்டது.
மழைநீர் ஓடிக்கொண்டிருந்த தெருக்களில் மிகவும் நனைந்துபோய் அனுங்கிய குரலில் கத்தியபடி நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்கும் தோன்றாத இரக்கம் அவனுக்குள் சுரந்தது. தூக்கிக்கொண்டு வந்தான். ஓலைப் பெட்டியால் கவிழ்த்து மூடினான். பொ¢ய கா¡¢யவாதி போன்ற பாவனையுடன் அம்மாவுக்குச் சொன்னான்.
"வளர்ந்தாப் பிறகு நல்லது...மரநாய் வராதம்மா....கோழிகளுக்குக் காவலாயிருக்கும்."
தினமும் செங்கா¡¢ப் பசுவில் பால் கறந்து ஊட்டினான். அவனுக்குத் தொ¢யும், எந்தப் பசுவின் பால் ருசியும், கொழுப்பும் மிக்கதென்று.
அம்மா மாடுகளை நோக்கிப் போனாள். நாய் அம்மாவின் கால்களைத் தடுக்கப் பண்ணி விளையாடியபடி பின்னே ஓடியது.
வாலிபத்தில் துள்ளுகிறது நாய். கொழுப்பேறி உடல் பளபளக்கிறது. நன்றாகத் தான் கொழுத்துவிட்டது. சீலன் கூட கொழுகொழு என்றுதான் இருந்தான். திரட்சியான கன்னங்களும், காந்தக் கண்களுமாக...எவ்வளவு அழகனாக இருந்தான் இந்த அம்மாவின் மகன்!