(Reading time: 6 - 11 minutes)
சிறுகதை - மோகவாசல் - ரஞ்சகுமார்
சிறுகதை - மோகவாசல் - ரஞ்சகுமார்

சிறுகதை - மோகவாசல் - ரஞ்சகுமார்

   

தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள்.

   

விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று.

   

இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.

   

"தேவ தேவா!...எமைக் காத்தருள்க..." என தேவர்கள் இறைவனிடம் இறைஞ்சிய ஒலியில் சப்த சமுத்திரங்களின் குமுறல்களும் தோற்று அடங்கின.

   

இறைவன் மதனை அழைத்துவர பூதகனங்களை ஏவினான். கரும்பு வில்லும் பஞ்சமலர்களும் மணம் பரப்ப மதனம், அவனுடன் குளிந்த சிரத்துடன் ரதியும் வந்தனர்.

   

இறைவன் இதழ்களில் குமிண்சிரிப்பு மேலும் சற்றே விரிந்தது. ரதி நடுங்கினாள். தன் நாதனுக்காக ஏங்கினாள்.

   

விசுவாமித்திரன் சினத்தை ஈரேழு உலகமும் அறியும்.

   

அவனது தவத்துக்கு பெண்களால் குந்தகம் ஏற்பட ஏற்பட அவனது கோபாக்கினி கொழுந்துவிட்டு ஜ்வாலித்தது.

   

தேவர்கள் விடாப்பிடியாக முயன்றனர். ரிஷிகள் அதற்கு நெய் வார்த்தனர்.

   

சகல சம்பத்துகளம், நால்வகைச் சேனையும் விசாலித்த தேசத்தையும் உடைய கெளசிகராஜன் பிரம்ம ரிஷி என பட்டமும் பெற்ற விடுவானாகில்....

   

வசிஷ்டன் கர்வபங்கம் செய்யப்படுவான் என அவர்கள் ஏங்கினர்.

   

பெண்களால் உலகில் கலகம் விளையும் என்பது எவ்வளவு தூரம் பொருந்தி வருகிறது. என்ன 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.