(Reading time: 13 - 26 minutes)

ஆடி வெள்ளி... - தங்கமணி சுவாமினாதன்

ன்று பௌர்ணமி.இரவைப் பகலாக்கிக்கொண்டிருந்தது நிலவு.இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும்.மனித நடமாட்டம் பெருமளவுக்குக் குறைந்துவிட்ட நேரம்.அந்த முத்து மாரியம்மன் கோயிலின் பின்புரம் ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்திருந்தது பாம்புப் புற்று.புற்றை ஒட்டி நிறைய புற்றுகள் சின்னதும் பெரிதுமாய்.அன்று ஆடி வெள்ளியுமாய்யிருந்ததால் காலையில் பெண்கள் அந்த புற்றுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூக்கள் தூவி படையல் படைத்து என்று நாக பூஜை செய்திருப்பார்கள் போலும் அந்த இடமே தெய்வீகமாய் இருந்தது.

இருப்பதிலேயே மிக உயரமாய் இருந்த புற்றிலிருந்து ஒரு அடி உயரத்திற்கு தலையைத் தூக்கி மெல்ல எட்டிப் பார்த்தது பாம்பு ஒன்று.தலையை நான்கு புறமும் திருப்பித் திருப்பிப் பார்த்தது.

நிலவொளியில் அதன் கண்கள் பளபளவென மின்னிற்று.மெதுமெதுவாய் முழு உடலையும் புற்றிலிருந்து வெளியே இறக்கிற்று. முழுவதுமாய் வெளியே வந்த அந்த பாம்பு கிட்டத்தட்ட ஐந்தரை அடி இருக்கும்.மிக இளமையான பாம்பு என்பது அதன் உடல் வாளிப்பிலும்,பளபளப்பிலும் தெரிந்தது.சமீபத்தில்தான் சட்டை உரித்திருக்கவேண்டுமென்பது அதன் உடல் வழவழப்பிலும் பளபளப்பிலும் தெரிந்தது.கீழே இறங்கிய பாம்பு தன் உடலை மூன்றடி தூக்கி படம் எடுத்தது,விரிந்த அதன் முகம் ஒரு காகிதப் பட்டம் அளவு ஆயிற்று.தலையின் பின்புரம் இருந்த நாமம் பார்த்தாலே பயத்தை உண்டாக்கும் விதத்தில் இருந்தது.உஸ்..உஸ்..என்ற சீற்றத்துடன் ஓங்கி தரையில் முகத்தால் அடித்தது.அவ்வாறு அடித்த இடத்தில் கட்டாயம் பூமியில் ஆழமான ஓட்டை விழுந்திருக்க வேண்டும்.அப்படியொரு ஆவேசமான கொத்து.கடும் சீற்றம்.

Aadi velliமெள்ள நகர்ந்து நகர்ந்து ஊர்ந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது அந்த நல்ல பாம்பு.தார்ச் சாலை 

அந்த சாலையைத் தொட்டதும் சாலையின் இருபுரமும் பார்த்தது.இந்தப் பக்கத்திலிருந்து எதிர்ப்புரம் சென்றது.சாலை இறக்கத்திலிருந்த நகரை நோக்கிப் படு வேகமாகச் சென்றது. நகரில் அடர்த்தியான வீடுகள்.எல்லா வீடுகளுமே காம்பௌண்ட் சுவரும் பெரிய பெரிய கேட்டுமாக இருந்தன.ஒரு வீட்டுக்கேட்டின் முன் போய் நின்றது அந்த பாம்பு.உடலைக் கொஞ்சம் தூக்கி அண்ணாந்து பார்த்தது.மாடியில் அறைகளோடு கூடிய வீடு.மாடியிலிருந்த ஒரு அறையிலிருந்து லேசான வெளிச்சம் திறந்திருந்த ஜன்னல் வழியாகக் கசிந்துகொண்டிருந்தது.மெயின் கேட்டின் அடி வழியாக நுழைந்தது.மாடி அறைக்குள் நுழைவது அதன் நோக்கமோ என்னவோ மீண்டும் தலை தூக்கி மேலே பார்த்தது.மிக உயரத்தில் இருந்த மாடி அறைக்கு எப்படிச் செல்வது சுவற்றில் ஏறி செல்வது கடினம்.

பிடிப்பு ஏதும் இல்லை.என்ன செய்யலாம் யோசித்தது.வீட்டின் பக்கவாட்டில் இருந்த கொய்யா மரத்தின் ஒரு கிளையின் நுனி கிட்டத்தட்ட மாடி அறையின் ஜன்னல் வரை நீண்டிருந்தது.சட்டென அந்த மரத்தில் ஏறிய பாம்பு குறிப்பிட்ட கிளையின் நுனி வரை சென்று ஜன்னலின் சிமென்ட் கட்டையில் தாவிக் குதித்தது.மெதுவாய் திறந்திருந்த ஜன்னல் கதவு வழியாக உள்ளே பார்த்தது.

உள்ளே கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் அமுதா.பக்கத்தில் ஒரு ஆண் குழந்தை.

நான்கைந்து மாதக் குழந்தை.குழந்தைக்குப் பால் கொடுத்திருப்பாள் போலும்.பால் கொடுத்தபடியே தூங்கிப்போயிருக்க வேண்டும்.பால் புகட்டிய மார்பை மூடாமல் அப்படியே தூங்கிப் போயிருந்ததால் மார்பு திறந்தே இருந்தது.பக்கத்தில் குழந்தை பால் குடித்த நிறைவில் கொஞ்சமே கொஞ்சம் நகர்ந்தாற்போல் தூங்கியபடி கிடந்தது.

மெள்ள ஜன்னல் கம்பியின் இடைவெளி வழியாக உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக முழு உடலையும் கீழே இறக்கிற்று.ஆயிற்று உள்ளே வந்தாயிற்று.அறையின் சுவற்றின் ஓரமாய் ஊர்ந்து சென்று அறை முழுதும் ஓர் முறை சுற்றி வந்தது.மெதுவாய்க் கட்டிலின் கால் வழியாக மேலே ஏறிற்று.ஏசி போடாத அறை.சுற்றும் ஃபேனின் மெல்லிய சப்தம் மட்டும்.அயர்ந்து தூங்கும் அமுதா.

அமுதாவின் கால் மாட்டிலிருந்து தூங்கும் அவளையே பார்த்தது பாம்பு.பக்கத்தில் வாயின் கடையோரம் பாலின் முத்துடன் தூங்கும் குழந்தை.அதன் முகத்தை ஒரு தரம் பார்த்த பாம்பின் பார்வை மீண்டும் அமுதாவின் முகத்தில் லயித்தது.

அம்மா...அம்மா...கூப்பிட நினைத்தது..ஆனால் அப்படி கூப்பிட முடியாது..அது பாம்பாயிற்றே..

அம்மா..அம்மா..என்னப் பாரேன்..நாந்தாம்மா ஒன்னோட மகன் சாய்ராம்..சாய்கண்ணா சாய்கண்ணான்னு ஆசைஆசையாய்க் கூப்பிடுவியே ஒன்னோட சாய்தாம்மா நான்.பாம்பா வந்திருக்கேன்மா.இதோ உன்னோட இந்த மார்புல முட்ட முட்ட பால்குடுச்சவன்மா நான்..என்ன கொஞ்சி கொஞ்சி பாசத்தக் காட்டிக் காட்டி பால் கொடுப்பியே அம்மா..மூணு வயசு வர மட்டும் தானே அம்மா உன்னோட பாசத்த என்னாலஅனுபவிக்க முடிஞ்சிது.உங்கிட்டேர்ந்து என்னையும் எங்கிட்டேர்ந்து உன்னையும் பிரிச்சுட்டானேமா அந்த பாவி அனூப்.அப்பவோட நா டூவீலர்ல போகும் போது விபத்துல சாகலம்மா..அந்தப்பாவி அனூப் திட்டமிட்டு விபத்த ஏற்படுத்தி என்னைக் கொன்னு.ரொம்ப சாமர்த்தியமா அது ஒரு விபத்துன்னு எல்லாரையும் நம்ப வெச்சுட்டாம்மா. பணத்தால ஜெயிச்சுட்டான்மா...ந்ல்ல வேள அப்பா பொழச்சுட்டாரு.என்னால ஒன்னோட மகனா இருந்து உன் பாசத்த அனுபவிக்க முடியலயேம்மா.அவன விடமாட்டேன்மா..விடமாட்டேன்.ஒனக்கு மகனாய்ப் பிறந்த நான் இந்தப் பிறவில பாம்பா பொறந்திருக்கேன்.பாம்பா இருந்து அவன் உயிரக் குடிக்கப் போறேன்மா.இது ஒனக்கு நான் செய்து தரும் சத்தியம்.நான் செத்து ஐந்து வருஷத்துக்குப் பிறகு தம்பி பொறந்திருக்கான்.அவன நல்லா பாத்துக்கம்மா.ஒன்னோட தாய்ப் பாசம் அத்தனையும் அவனுக்குக் கிடைக்கட்டும்.அந்தப் பாவி அனூப்புக்கு இன்னும் ரெண்டு ..நாள்ள கல்யாணம். இன்னிக்கே அவன் கதைய முடிச்சிடப் போறேன்...நான் கிளம்புறேன்மா.இனி மேல் ஒன்ன என்னால பாக்க முடியாது..ஏன்னா எங்க இனம் சாதாரணமா யாரையும் வலியச்சென்று கடிக்காது.

யாராவது பாம்பு கடித்து சாகணும்னா அவாள கடிக்கும்படி ஆண்டவன் ஏதாவது ஒரு பாம்புக்கு கட்டளை இடுவார்.என்னால் அது முடியாது நான் செய்ய மாட்டேன் என்று அந்த பாம்பு மறுக்கும்.நீதான் செய்ய வேண்டும் என ஆண்டவன் வற்புறுத்துவார்.வேறு வழியின்றி அப் பாம்பு ஒப்புக்கொள்ளும்.

ஆண்டவன் இட்ட கட்டளை ஆயிற்றே?கடிக்கவேண்டியவனைக் கடிப்பதற்கு ஒருவாரம் முன்பிருந்து இரை ஏதும் எடுக்காது.மிகுந்த வருத்தத்தில் இருக்கும்.ஆண்டவன் சுட்டிக்காட்டியவனை கடித்து அவன் இறந்துவிட்டால் பாம்பு தானும் இறந்து விடும்.இது எங்களின் தர்ம வழியம்மா.

எனவே அந்த துரோகி,பாவியைக் கொன்றுவிட்டு நானும் இறந்து விடுவேன் அம்மா..நான் போறேன்மா..அம்மா அதற்கு முன் ஒரு ஆசைமா...

தன் முன் பிறவித் தாய் அமுதாவுக்கும் புதிதாய்ப் பிறந்துள்ள குழந்தைக்கும் இடையே அரையடி அகலத்திற்கு இடைவெளி இருப்பதைப் பார்த்தது அந்த பாம்பு.அந்த இடைவெளியில் இருவருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யாமல் ஊர்ந்து சென்றது.அமுதாவின் பால்தரும் மார்புக்கு நேராய்த் தன் தலையைக்கொண்டு வந்தது.கொஞ்சமாய்த் தன் தலையைத் தூக்கி தன் விஷப் பற்கள் படாமல் வெகு ஜாக்கிரதையாய் திறந்திருந்த மார்பில் தன் வாயை வைத்து லேசாய் ஒரு இழுப்பு இழுத்தது.

ஒரு சொட்டுப் பால் அதன் வாயில் போயிருக்குமோ என்னவோ?மீண்டும் மெதுவாய் ரிவெர்ஸிலேயே நகர்ந்து கீழே இறங்கிய பாம்பு சரசரவென ஜன்னலில் ஏறி கீழே குதித்தது.அனூப்பின் இருப்பிடம் நோக்கிச் சென்றது.

தையின் முன் பாகத்தில் சொல்லப்பட்ட விபரங்கள் நடக்கக் காரணமான கதையின் ஆரம்பம் கீழே:-

அன்று ஆடிமாத முதல் வெள்ளிக் கிழமை.சீக்கிரமே எழுந்து ஸ்னானம் செய்துவிட்டு கிச்சனில் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தார் மீனாட்சி.மணி ஆறு.அமுதினி இன்னும் எழுந்தபாடில்லை.

அமுதா.. அமுதா..எழிந்திருப்பா..எழுந்திரு எழுந்திரு...

ம்..ம்...இரும்மா..இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேம்மா..ப்ளீஸ்..மா..புரண்டு படுத்தாள் அமுதினி எனும் இருத்துமூன்று வயது இளம் மங்கை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.