(Reading time: 20 - 39 minutes)

மெல்ல ஷாலுவை தேடிப் போனான்.

ஒரு அறையில் அவளுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்குமாயிருக்கும்.  “தொட்டா கைய ஒடச்சிடுவேன்… “ அவள் தான் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். வெளியிலிருந்து கேட்ட இவனுக்கு திக்.

“என்ன நீ எதையும் புரிஞ்சுகாம சின்ன பிள்ள மாதிரி பேசிட்டு இருக்க….? பொண்ணுனா இதுலெல்லாம் விட்டு கொடுத்துப் போக தெரியனும்…. இனிமே கல்யாணம் ஆயாச்சு….” எதோ ஒரு சித்தி அட்வைஸ் செய்ய அவர்கள் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவிடவில்லை இவள்

“கல்யாணம் ஆகிட்டுன்னா…..? நான் என்ன அடிமையாகிட்டேன்னா அர்த்தம்? அதெல்லாம் ஒத்துக்க முடியாது. தொட்டா பிச்சிருவேன் பிச்சி சொல்லி வைங்க….”

அதற்கு மேல் அங்கு நின்று அவள் இன்னுமாய் இவனை எப்படி அடிக்கப் போகிறாள் என கேட்க அவனுக்குத் தெம்பு இல்லை.

சரித்ரனுக்கு யார் இதைப் பற்றி ஷாலுவிடம் பேசினால் அவள் புரிந்து கொள்வாள் என தெரியவில்லை. கல்யாணத்துக்கு முன்னால எதெல்லாம் செய்யக் கூடாதுன்றதுல ஷாலு டபுள் பி எச் டி. அதில நோ டவ்ட்……பட் இப்போ?  ஷாலுவுடன் இன்னொரு ரன்னிங் ரேஸுக்கு நிச்சயமா அவன் தயாரா இல்லை. அதுவும்  இன்னைக்கு நைட்.

ஆக ஆசைகளையெல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டு தன் குழந்தை மனைவியை வரவேற்க காத்திருந்தான் அவன்.

உள்ளே வரும் போதே ஷாலுவின் முகத்தில் ஒரு வித மிரட்சி வேறு. பார்க்க அள்ளலாம் போல் அவனுக்கு பிடித்த குட்டி ஹிப் செய்னுடன்…ம்…

அவளுடன் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு படுத்துவிட்டான். “நாளைக்கு கலைல ஃப்ளைட் சீக்கிரம் கிளம்பனும்” என சொல்லிவிட்டு.

மறுநாள் மும்பையில் ரிஷப்ஷன் முடிந்த இரவு ஷாலுவுமே படு டயர்ட். இருவரும் இரவில் தனிமை கிடைக்கவும் இன்ஸ்டென்ட் தூக்கம். அடுத்த அடுத்த நாட்கள் அவனுக்கு பகலில் சொர்க்கமும் இரவில் நரகமும்.

 காரணம்,  பழகினால் உணர்வே உணர்த்திவிடும் கணவன் மனைவி உறவை என எண்ணி மனைவியை பகலில் உடன் கூட்டிக் கொண்டு ஊர் சுற்றிக் காமித்தான் சரித்ரன். கை கோர்த்தல்  சமயத்தில் தோள் சாய்தல் சின்ன தீண்டல் செல்ல சீண்டல் எல்லாம் தான்.

ஆனால் இரவில் தனிமையில் இவனைப் பார்த்தவுடன் வரும் அவள் லுக் மாறவே இல்லை. பகல் ஏற்றி வைத்த ஆசைக் கனவுகள் இரவில் இவனைக் கருக்க…..

கதை இப்படியே தொடர சில நாட்களில்  சென்னையில்  தனிக் குடித்தனம் வந்தாகிவிட்டது.

பகல்ல பக்கத்துல இருந்து பார்த்து ஏங்குறது நல்லதுக்கு இல்லை…..நைட் இவனை மீறி இவனே ஏதாவது செய்து வைத்துவிடக் கூடாது என, ப்ளான் செய்திருந்த லீவை கேன்சல் செய்துட்டு ஆஃபீஸ் போக தொடங்கினான் சரன்.

ஆனாலும் இரவில் அவளைப் பார்க்கும் போது ஆசை வராமலா இருக்கிறது? ஆக இன்று நைட்டும் லேட். 1 மணி என்றது கடிகாரம் அவன் வீட்டிற்குள் நுழையும் போது.  மயில் கழுத்து நிற புடவையில் சில சிறு நகைகளுடன் தூக்க கலக்கத்தில் அவள்…

ஓ இவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கா…..

பார்க்க மயங்க தொடங்கி இருந்த ரோஜா போல் அவள்.

 “சாரிடாமா லேட் ஆகிட்டு… இனிமே எனக்காக வெயிட் பண்ணாத…..தூங்கிடு…என்ட்டதான் கீ இருக்குல்ல…..”

போய் படுக்கையில் விழுந்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

இல்லையெனில் அவள் இடையில் கீற்றாய் விலகியிருந்த புடவையிடம் போகிறதே இவன் பார்வை….

றுநாள் ஈவ்னிங் ஆஃபீஸில் முக்கிய மீட்டிங்……இவன் தான் பேசிக் கொண்டிருந்தான். அந்த அறை அனுமதி இன்றி திறக்கப்பட உள்ளே வருவது????

பர்பிள் நிற சாரி…பார்டிக்கு வருவது போல் அலங்காரம்…ஷாலுதான். அவள் கையில் பெரிய கேக்….பெர்த் டே கேக்….. நெற்றியைப் பிடித்துவிட்டான் சரன். இன்று இவனுக்கு பெர்த் டே….நேத்து நைட் விஷ் பண்றதுக்காக காத்துட்டு இருந்திருப்பா….

அவளுடன் நல்ல உறவு வேண்டும் என்ற பயத்தில் உறவை கொன்று கொண்டு இருக்கிறேனோ? இன்று அவளிடம் மனம்விட்டு பேசிவிட வேண்டும்….

இவனை நோக்கி வந்தவள் இவன் முன்னிருந்த டேபிளில் அந்த கேக்கை வைத்துவிட்டு அவனை இழுத்து அணைத்து கன்னத்தில் வைத்தாள் முதல் முத்தம். “ஹேப்பி பெர்த் டே ஹால்ஃப் டே சாமியார்.” இவனுக்கு மட்டும் கேட்கும் படியாய்….

அத்தனை பேர் முன்னிலையில் அவள் செயல் இவனுள் ஒரு பக்கம் வெட்கம் மறு பக்கம் கர்வம், சந்தோஷம். “வீட்டுக்கு வாடி கவனிச்சுகிடுறேன்….”

“கவனிக்கலைனா கொலையே விழும் இன்னைக்கு…..”அவள் புல் ஃபார்மில் இருந்தாள்.

உள்ளுக்குள் சுழற்றும் இன்ப அலை எதையும் காட்டிக் கொள்ளாமல் கேக் கட்டிங் இவன் செயல்…. அதை அங்கிருந்த எல்லோருக்கும் பகிர்ந்தவள்…

“இந்த செஷன் இதோட முடிஞ்சுட்டு….கேச் யூ லேட்டர்” என அறிவித்து எல்லோரையும் ஏறத்தாழ துரத்தி விட்டு இவனை கடத்தாத குறையாக காருக்கு…..அவள் செயல்.

அன்று பீச்சில் அவனுக்கு வந்த ஆசையை இன்று நிறைவேற்றினான் காரில். கணவன் செயல். தன்னவன் தோளில் சுருண்டாள் பெண்ணவள்.

வீட்டில் நுழைந்தால் முழு அலங்காரத்தில் படுக்கை அறை. அவன் மனைவியின் வேலைதான்.

வாசலிலிருந்து படுக்கைக்கு அவளை அள்ளி வந்தவன் ஆசையாய் தன்னவள் முகம் பார்க்க இப்பொழுதும் அதே லுக். எல்லாவற்றையும் செய்துவிட்டு இப்படி முழித்தாள் எப்படியாம்?

மெல்ல படுக்கையில் வைத்தான் அவளை. “ ஸ்ரீ குட்டி என்னாச்சுடா?”

“என்ன?” என்றாள் அவள்.

“உன் முகம் சரியில்லையே…”

“அது கொஞ்சம் டென்ஷனா இருக்குப்பா அவ்ளவுதான்…” அவனுக்குள் முகம் புதைத்தாள். இதுக்கு பயந்து தான் இவ்ளவு நாளை இவன் மிஸ் செய்தாச்சா?

தலைவன் தலைவி சரணுறு காவியம். பூங்காற்றாய்  ஒரு உறவுறு வைபவம். கணவன் மனைவி காதல் சம்பவம் . செயலாக்கம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.