அம்மா ..சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதீங்க ..அதான் பிழைச்சு வந்துட்டேன் இல்லை .. ...சர்ஜரி பண்ணிக்கிட்டவன் எல்லாம் வேலைக்கே போறதில்லையா ..?
நீ எங்களுக்கு ஒரே பிள்ளைடா ..
சரிமா .இங்க வரும்போதெல்லாம் இப்படி கண்ணை கசக்கிட்டு இருந்தா அப்புறம் எனக்கு இங்க வர பிடிக்குமா சொல்லுங்க ..? அதான் இப்போ என்னை நல்ல படியா பார்த்துக்க உங்க மருமக வந்துட்டா இல்லை அப்புறம் என்ன மா ...?
அவ வந்துட்டா ஆனா அவ கிட்ட தான் நீ சொல்ல வேணாம்னு சொல்லிட்டியே .. எங்க நான் அங்க வந்து இருந்தா அந்த விஷயத்த சொல்லிடுவேனொன்னு தான என்னை அங்கே கூட வர வேணாம்னு சொல்ற ..?
அம்மா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை மா ..இங்கயே பழகிட்டு அங்க உனக்கு சரிபட்டு வராது அதான் ..
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ழைப்பு கொடுத்து கொண்டிருக்க ..சரண் ஒரு முறை பிரியாவிடம் பிரியா எனக்கு என்னவோ நம்ம பாரதி முக மூடிய போட்டுட்டு இந்த பாரதிராஜனா வந்த மாதிரி இருக்கு ...என்று சொல்ல அன்று முதல் அவனை நண்பனுக்கும், கணவனுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் வைத்து காண ஆரம்பித்தாள் எனில் அவனை காதலிக்க ஆரம்பித்தாள் எனலாம்..