(Reading time: 17 - 33 minutes)

சமர்ப்பணம் - VJ G

This is entry #17 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

முரளி, கோவிலுக்கு போகவேண்டுமென்று கிளம்பினான், அவன் அம்மா, "அடேய், இன்னிக்கு நானும் உன்னுடன் கோவிலுக்கு வரேன், என்னையும் கூட்டிக் கொண்டு போடா," என்றார்

அவனுக்கோ, இன்னிக்கும் அவளைப் பார்க்க வேண்டுமே, அம்மா கூட வந்தால் அவளை எப்படி பார்ப்பது, என்று நினைத்துக் கொண்டிருந்தான்….   அம்மாவையும் வேண்டாமென்று சொல்ல முடியாது, என்ன செய்வது..

"சரி சீக்கிரம் வாம்மா, ரொம்ப நேரம் ஆக்காதே !"

samarpanam"இதோ வந்துடேன்டா," என்று  பைக்கில் ஏறிக் கொண்டாள்

அவனுடைய அம்மாவிற்கு ஐம்பது வயது, மகனை புரிந்துக் கொண்டு நடப்பவள், அவன் விருப்பத்தை நிறைவேற்றுபவள், அவனை எதற்கும் கட்டுப்படுத்த மாட்டாள், அவனிடம் ஒரு தோழியைப் போலவே பழகுவாள்,

அதனால் தன் அம்மாவை மிகவும் பிடிக்கும்,

ஆனால் இப்போதோ, தன் அம்மா கூட வருவது, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அம்மாவுக்கு தன் அசைவிலேயே தெரிந்துவிடும்,....ஏதாவது சந்தேகம் இருந்தாலும் ஆச்சர்யமில்லை, எப்படியோ அம்மாவை சமாளிக்க வேண்டும்,

சமாளிப்போம்…...

"முரளிளிளி....."

"என்னம்மா?"

"என்னடா! கனவு கண்டுண்டே வண்டியை ஓட்டற? இப்படித்தான் தினம் வண்டி ஓட்டுரியா?"

"இல்லம்மா, ரோடுல கான்சென்ட்டிரட் பண்றேன், அதான் நீ கூட்டத கவனிக்கல, என்ன விஷயம்மா?"

"ஒண்ணுமில்ல, என்ன வேண்டுதல் தினம் கோவிலுக்கு போற?"

"ஏம்மா, ஏதாவது விஷயம் இருந்தாதான் கோவிலுக்கு போவாங்களா?, ஏம்மா, நீயும் சாதாரண அம்மாக்கள் மாதிரி சந்தேகப் படற,"

"அது என்னடா, சாதாரண அம்மாக்கள் மாதிரின்ற, எல்லா அம்மாக்களுக்கும் ஒரே மாதிரி  கன்சர்ன் தான், தன் பசங்களைப் பற்றி…”

"சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம், கோவில்ல எந்த முக்கியமான வேண்டுதலும் கிடையாதம்மா, ஏதோ ரெகுலரா கோவிலுக்கு போகணும்னு தோணித்து அதான் போறேன், நீ எதுக்கு அடிக்கடி கோவிலுக்குப் போற,?"

"நான் என்ன..உனக்காகவும், அப்பாவுக்காகவும்தான் கோவிலுக்குப் போவேன்,"

"ஏன் நான்…. உனக்காகவும், அப்பாவுக்காகவும் கோவிலுக்கு போகக்கூடாதா "

"ரொம்ப தேங்க்ஸ் முரளி, நீ எங்களுக்காக கோவிலுக்குப் சாமிகிட்ட வேண்டிக்கிரதுக்கு!”

" என்னம்மா, தேங்க்ஸ் எல்லாம் பலம்மா இருக்கு,"

"என்னப்பா பண்றது, சரி, உனக்கு என் ப்ரெண்ட் கோகிலா தெரியுமில்ல அவ பெண் கிருத்திகாவை பேசி முடிவு பண்ணிடலாமென்றிறுக்கிறேன்  , நீ என்ன சொல்ற?.."

கோவில் வந்து விட்டது, பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு "அம்மா இறங்கு," என்று கூறி, அவள் இறங்கியதும், தானும் இறங்கி  ஸ்டாண்ட் போட்டு, லாக் செய்து விட்டு, கோவிலுக்கு உள்ளே சென்றான், அதற்கு முன் அவன் அம்மா உள்ளே சென்று விட்டாள், அவன் தன் கண்ணை சுழல விட்டு, சுற்றிலும் அவள் எங்கேயாவது இருக்கிறாளா என்று பார்த்து கொண்டே சன்னதியினுள் சென்றான்..

அங்கே கண்ணை மூடிக் கொண்டு வேண்டினான், இன்று, அம்மாவினால் கொஞ்சம் லேட்டாகி விட்டது, கடவுளே அவள் வந்து விட்டு போய்விட்டாளா, நீதான் எனக்கு அவளை என் கண்ணில் காட்ட வேண்டும், என்று வேண்டிக் கொண்டான்…

அவன் கடவுளை வேண்டிக் கொண்ட நேரம் அவள் எதிர் முனையில், நின்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள், பூசாரி, தட்டைக் கொண்டு வந்து அவனிடம் பிரசாதத்தைக் கொடுத்தார், அவன் கண் விழித்து அதை வாங்கினான், அப்போதுதான் எதிரில் நிற்கின்ற அவளை பார்த்தான்.... தன்னுடைய ஜென்மம் சாபல்யமடைந்தது போல் உணர்ந்தான்....

என்னவளைப் பார்த்து விட்டேன், அவளும், அவனை நிமிர்ந்து பார்த்தாள், இருவரும் அண்ணலும் நோக்கினாள், அவனும் நோக்கினான், என்று ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர், பூசாரியின், "இந்தாங்கோ" என்று கூறும்வரை, அவள் கண்ணை தாழ்த்திக் கொண்டாள்,

அவன் அப்போதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், அழகு, கண்ணைக் கொள்ளைக் கொள்ளும் அழகு, நல்ல உயரம், நல்ல சிவப்பு, பெரிய கண்கள், ஒல்லியான தேகம், அவள் கட்டியிருந்த பாவாடை, தாவணியில் கொள்ளை அழகு... அவன் திடீரென்று தன் அம்மா எங்கே என்று கண்ணை சுழல விட்டான்,

கண்ணுக்கு எட்டும் வரையில் அம்மாவைக் காணவில்லை,சரி பிராகாரத்தை சுற்றி வருகிறாளோ என்று….தான் மறுபடியும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்,

அவன் பிரகாரத்தை சுற்றிக் கொண்டு வந்தான் இன்னொருமுறை அவளைப் பார்க்க திரும்பினான், அவளும் இவனை ஒரு பார்வை பார்த்தாள், அவன் மனம் லப் டப்  என்று வேகமாக அடித்தது…...வெளியே தன் பைக் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தான், அங்கு அவன் அம்மா, அவனுக்காக காத்திருந்தாள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.