(Reading time: 19 - 37 minutes)

ன் அறைக்கு வந்தவனுக்கு பேட்டை கீழே வைக்க மனமில்லை. வலது கையில் பேட்டை காற்றில் சூழற்றினான். சட்டென ரம்யா வந்து அவனை கட்டி அணைத்தாள்.

“கன்கிராட்ஸ் ராகவ்” அவள் குரல் கரகரத்தது. அவள் அழுகிறாள் என புரிந்தது.

“ரம்யா”

“நிச்சயம் நீங்க பெரிய அளவுல சாதிப்பீங்க” குரலில் மகிழ்ச்சியும் அழுகையம் கலந்திருந்தது.

தன் இடது கையை அவள் முகத்தில் பதிக்க கையை துழாவினான். அவள் உதவினாள், அவன் கை விரல்  அவள் கண்ணீரை  துடைத்தது. அவள் அவன் உள்ளங்கையில் முத்தமிட்டாள்.

“ஐ லவ் யூ ராகவ்”

“நானும் உனை . .” அவனால் பேச முடியவில்லை. காதலுக்கும் கண் இல்லை தனக்கும் கண் இல்லை  என மனம் பொருத்தம் பார்த்தது. தொடர்ந்து “தேங்க்ஸ் ரம்யா”

“எதுக்கு?”

“நீ ரெகமண்ட் பண்ணதுக்கு”

“ரெகமண்ட் எல்லாம் இல்லை உங்களுக்கு இதுல ஆர்வமும் திறமையும் இருக்கு. அத வெங்கட் சார்கிட்ட சொன்னேன் அவ்வேளாதான் . . .” என்றாள் குறும்பாக

“ராகவா” என அம்மா அங்கே வர இருவரும் சட்டென விலகினார்கள். அம்மாவிற்கு சந்தோஷம்.

2 கண்களை இழந்த போதும் . . .

2 பெண்கள் அவன் வாழ்க்கையின் கண்கள் ஆனார்கள் . . .

அம்மா சரஸ்வதி  மகனின் மகிழ்ச்சியை பார்த்து சந்தோஷப்பட்டாள். அவள் விழித்துக் கொண்டே கனவு கண்டாள் . . . தன் மகன் அத்தனை துன்பங்களையும் துயரங்களையும் பேட்டினால்  விளாசினான்.

அருகே அவனுக்கு துணையாக நிற்கும் ரம்யா அத்துன்பங்களை பார்த்து

"என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க..." என்றாள் அவள்.

This is entry #85 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - முடிவிற்கான கதை...

எழுத்தாளர் - சுபஸ்ரீ

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.