(Reading time: 22 - 43 minutes)

" ஹாய் ராகவி ஹாப்பி மேரிட் லைஃப்.." என்றாள் ஒருத்தி..

"ஏண்டி நீ வேற.. நம்ம ஸ்ரேயா தப்பிச்சிட்டான்னு பார்த்தா.. பாவம் ராகவி மாட்டிக்கிட்டா... ராகவி ஒரு அப்பாவின்னு நினைச்சு, அவளை பாவம் அஜய்க்கு கட்டி வச்சிட்டாங்க... இதுல எங்க இருந்து ஹாப்பியா இருக்கறது.." என்றாள் இன்னொருத்தி...

ராகவி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க... "ஏன் ராகவி.... நேத்து தான் மேரேஜ் முடிஞ்சுது... இன்னைக்கு தனியா ஷாப்பிங் வந்துருக்க... ஏன் அஜயை கூட்டிக்கிட்டு வரலையா..??" என்று கேட்க..

"அதெப்படி தனியா வந்திருப்பா.. அவளை பார்த்து எல்லோரும் பரிதாபப் படனும், தியாகின்னு பட்டம் கொடுக்கனும்.. அதுக்காகவாவது அஜயோட வந்திருப்பா.." என்று ஸ்ரேயா சொன்னாள்.

"யாரும் எனக்கு தியாகி பட்டம் கொடுக்க தேவையில்லை... யாரும் என்னை கட்டாயப்படுத்தி அஜய்க்கு கல்யாணமும் செய்து வைக்கல... நான் அஜயை மனசார காதலிச்சேன்... அவரையே கல்யாணமும் செய்துக்கிட்டேன்..." என்றதும் எல்லோரும் கொஞ்சம் வியப்பும், அதிர்ச்சியும் கலந்த பார்வை பார்த்தனர்...

"என்ன எல்லோரும் அப்படிப் பார்க்கீறீங்க... நான் அஜயை எப்போ காதலிக்க ஆரம்பிச்சேன்னு தெரியாது... ஆனா அவரை நான் ரொம்ப காதலிக்கிறேன்... என்னோட காதல் வெளித்தோற்றத்தை பார்த்து வந்ததில்ல... அவரோட மனசைப் பார்த்து வந்தது... ஆனா நன்றிக்கெட்ட ஒருத்திக்காக என்னோட காதலை விட்டுக் கொடுக்க வேண்டியதாகப் போச்சு..." என்று ஸ்ரேயாவைப் பார்த்து ராகவி சொன்னதும், அவளுக்கு கோபம் வந்தது...

"மனசைப் பார்த்து வந்த காதலா...?? எவ்வளவு நாள் அந்த காதல் இருக்குன்னு பார்க்கலாம்... அஜய் கூட என்னால வாழ முடியாதுன்னு சொல்லி நீ வர தான் போற...  லவ் இன் ஃபர்ஸ்ட் ஸைட்ன்னு சொல்றாங்களே எதுக்கு... அது அழகப் பார்த்து தானே.." என்று ஸ்ரேயா கேட்டதும்..

"லவ் இன் ஃபர்ஸ்ட் ஸைட் வெறும் புற அழகை பார்த்து தான் வருதுன்னு சொன்னா நீ ஒரு முட்டாள்... ஒருத்தரோட அழகு மட்டுமில்ல... முதல் முறை ஒருத்தர பார்க்கும் போது அவங்க சிரிப்போ, இல்லை பேச்சோ, இல்லை அவங்க நடவடிக்கையோ.. எது வேணாலும் நம்மள கவரலாம்...

அவங்கக் கூட ஏற்கனவே பழகியிருக்கா மாதிரி தோனும்... இல்ல பழகி பார்க்கனும்னு தோனும்... அவங்கக் கூட நெருக்கமான ஒரு ஃபீல் கொடுக்கும்... இது காதலுக்கு மட்டுமில்ல... நட்பு, சகோதர பாசம் எல்லாத்துக்கும் பொருந்தும்...

நான் அஜய் மேல வச்ச காதல் மனசை பார்த்து வந்தது... அது என்னைக்கும் குறையாது... இன்னும் சொல்லனும்னா அது முன்னை விட அதிகமாக தான் ஆகியிருக்கு... ஏன்னா, காதலிச்ச பொண்ணை காப்பாத்த, அவரோட உயிரையே பொருட்படுத்தல... அப்போ மனைவியான எனக்கு என்னல்லாம் செய்வாரு... அந்த மனசை தான் நான் விரும்புறேன்...

யாராவது என்னைப் பார்த்து பரிதாபப் பட்றாங்களா..?? இருக்கட்டுமே... ஆனா அந்த பரிதாபத்தையும் தாண்டி, அவங்க உள்மனசுல இந்த ஜோடி நல்லா இருக்கட்டும்னு யாராவது ஒருத்தராவது வாழ்த்துவாங்க...  அது எங்களுக்கு கிடைச்சா போதும்... நாங்க சந்தோஷமா இருப்போம்... இருப்போம் என்ன..?? நேத்தே எங்க வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிச்சிட்டோம்.." என்றாள்..

அவள் விரும்பி கேட்ட உணவு அந்த உணவகத்தில் இல்லை என்பதால், வேறெதாவது வேண்டுமா..?? என்றுக் கேட்க அங்கு வந்த அஜய், அவள் பேசியதை முழுவதும் கேட்டான்... அவன் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச குழப்பமும், தயக்கமும் இப்போது முற்றிலும் மறைந்திருந்தது... இன்னும் அவர்கள் வேறெதாவது பேசி அவளை காயப்படுத்தப் போகிறார்கள் என்று நினைத்தவன் அவள் அருகில் சென்றான்...

அவர்களையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் அவளிடம் சென்றவன்... "ராகவி நீ கேட்ட டிஷ் இங்க இல்ல... நாம வேறெங்கயாவது போய் சாப்பிடலாமா..??" என்றான்.

அவளும் சரி என்று ஒத்துக் கொண்டு தாங்கள் வாங்கியிருந்த பொருட்கள் அடங்கிய பையை கையில் எடுத்தவள் அவர்களை முறைத்துவிட்டு அவனோடு சென்றாள்.

சில அடிகள் எடுத்து வைத்தவள்.. "அஜய் ஒரு நிமிஷம் இருங்களேன் வந்துட்றேன்.." என்றாள்.

"அதான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாச்சு இல்ல... விடு ராகவி போலாம்.." என்றான் அவன்..

"ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு வந்துட்றேன் அஜய்... நீங்க பார்க்கிங்ல வெய்ட் பண்ணுங்க.." என்று சொல்லிவிட்டு அவர்களை நோக்கி நடந்தாள்.

அவளை சீண்டிப் பார்க்க நினைத்து மூக்கறுப்பட்டு நின்றிருந்த அவர்கள், திரும்ப அவள் வருவதை கவனித்து எதற்கு வருகிறாளோ என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்...

"நீங்க சொன்னமாதிரி அஜயை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு நான் என்னைக்கும் ஃபீல் பண்ண மாட்டேன்... ஆனா எதுக்கு நான் ரொம்ப ஃபீல் பண்றேன் தெரியுமா..?? உங்களையெல்லாம் நல்ல ஃப்ரண்ட்ஸ்னு நினைச்சதுக்காக தான்...

அன்பு, பாசம், கருணை இதெல்லாம் இல்லாத நீங்கல்லாம் பொண்ணுங்களான்னே தெரியல... இதுல எங்க நல்ல ஃப்ரண்ட்ஸா இருக்கறது... உங்களையெல்லாம் நான் பார்க்கறது இதுவே கடைசியா இருக்கட்டும்.. இதுக்கப்புறம்,

"என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க..." என்றாள் அவள்.

 

This is entry #128 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை ஆரம்பத்தில் இருந்து தொடர்க... / முடிவுக்கான கதை

எழுத்தாளர் - சித்ரா.வெ.

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.