கேட்டுக்கொண்டிருந்த கீர்த்தியின் மனக்கண்ணில் விரிகிறது சுலோசனாவை கண்ட நாள் முதல் இன்று வரை அவளுடைய செயல்களும் அதற்கு பின்னிருக்கும் உண்மைக் காரணங்களும்.
‘ஹாஸ்பிடலில் என்னை உருட்டி மிரட்டினது.. அம்மா அப்பாவை பற்றி நினைக்க கூடாதுன்னு… இந்த வீட்டை விட்டு வெளிய போக விடாம இருந்தது அவங்க என்னை பார்க்கவோ பேசவோ கூடாதுன்னு… அழக்கூடாதுன்னு தடை போட்டது என்னை இயல்புக்கு கொண்டுவர.. எல்லாத்துக்கும் மேல இப்போ என்னோட பி.ஏச்.டி-கு காரணம்….’
சுலோசனாவை புரிந்து கொண்ட நொடி கீர்த்தியினுள் எழுந்தது ஒரு பிரளயம்.
கண்களில் வழிந்த நீரோடு சுலோசனாவின் அறை நோக்கி ஓடினாள் கீர்த்தி. க்ளாசெட்டில் எதையோ எடுத்து கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்து கொண்டு கேவினாள் கீர்த்தி.
புரியாது குழம்பிய சுலோசனாவின் கண்களில் விழுந்தது கீர்த்தியின் கையிலிருந்து தரையில் விழுந்த அவளுடைய இறந்த காலம்.
“என்னை மன்னிச்சிடுங்க அம்மா!” தன்னை காப்பாற்றி அவளின் வளமான வாழ்வுக்காக போராடிய சுலோசனாவை தன் அன்னையாக உணர்ந்தாள் கீர்த்தி. இன்னுமும் அவளின் அழுகை ஓய்திருக்கவில்லை.
“பெண்கள் யாருக்காகவு அழக்கூடாது! அவங்க யாரையும் நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லைங்கறது உலகத்துக்கு நிரூபிக்கனும். சமுதாயம் என்னை ஒதுக்கியது உண்மைதா ஆனா அதே சமுதாயத்துல எனக்கான அங்கீகாரத்தை இன்னைக்கு நிலைநாட்டிட்ட…”
சுலோசனா அறிந்திருக்கவில்லை! மறைத்து வைக்கப்பட்டிருந்த கீர்த்தியின் வாழ்க்கை பக்கங்களையும் அவள் படித்துவிட்டாளென்று!
சுலோசனாவின் வார்த்தைகளை கேட்ட கீர்த்திக்கு என்ன தோன்றியதோ “இந்த கீர்த்தியோட அங்கீகாரத்தைப் பார்த்து சமுதாயமே வாய பிளக்கும்” என்று சொல்லியவளின் கண்களின் கண்ணீர் மறைந்து உறுதி மின்னியது.
This is entry #136 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை − கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...
எழுத்தாளர் - தமிழ்தென்றல்
{kunena_discuss:1083}