அஞ்சனா தன் ஸ்கூட்டியில் கோவில் வாசலில் வந்து இறங்கினாள். அவனைப் பார்த்ததும் ஒன்றுமே பேசாமல் தலையை குனிந்துகொண்டு நடக்கத் தொடங்கினாள்.
அஞ்சனா அவனைக் கடந்து செல்கையில் "கன்க்ராட்ஸ் அஞ்சு, உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்காமே அதுவும் ரொம்பவும் அழகான மாப்பிளையாமே, இதை நானே எதிர்பாக்கலை. எப்படி அப்படி ஒரு அழகனை செலக்ட் பண்ணே? சான்சே இல்லை" என்றான் நக்கல் தொனியில்.
அஞ்சனா அவனை நேர் பார்வை பார்த்தாள் " உண்மைதான் மாமா, சுந்தர் ரொம்பவும் அழகானவர்தான், ஏன் தெரியுமா? அவரால எனக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைக் கொடுக்க முடியும். அவர் ஒரு உத்தியோகத்தில் இருக்கார். மாசம் பொறந்தா சம்பளம் வந்துடும், எதிர்காலத்துக்கு சேமித்தும் வைக்க முடியும், அவர் யார் மாதிரியும் ஊதாரியோ அல்லது சோம்பேறியோ, அப்பா பணத்தில் வாழுரவரோ இல்லை. ஒரு பெண்ணிடம் ஆண் எதிர்பார்ப்பது அழகு என்றால் ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது உத்தியோகம்தான். அதுதான் புருஷ லட்சணம். உத்தியோகம் இல்லாமல் நீங்க என்னதான் அழகா இருந்தாலும் உங்களை ஒரு பெண் கூட மணக்க சம்மதிக்கமாட்டா. அதனால அனாவசியமா சுந்தரைப் பத்தி கேவலமா பேசாம உழைச்சு முன்னேறப் பாருங்க. அப்போதான் உங்களுக்கும் காலா காலத்துல கல்யாணம் நடக்கும்" என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் அஞ்சனா.
தன்னையும் ஒரு பெண் நிராகரித்ததை நம்ப முடியாமல் சிலையாக நின்றான் சுதீர்.
அன்று மாலை நல்ல பிள்ளையாக அறையில் உட்கார்ந்து பெரிய பெரிய புத்தகங்களை வைத்து படித்துக்கொண்டிருந்த மகனை ஆச்சர்யத்துடன் பார்த்தார் சிவநேசன் "என்னப்பா சுதீர் எந்த எக்சாமுக்கு தயார் பண்றே" என்றார்.
அவர் உள்ளே வந்ததைப் பார்த்து எழுந்து நின்றான் சுதீர் "என்னை மன்னிச்சுடுங்கப்பா, உங்களுக்கு ரொம்பவும் கஷ்ட்டம் கொடுத்துட்டேன், இந்த வருஷம் எப்படியும் ஐ. ஏ. எஸ் பாஸ் பண்ணப் போறேன் அதுதான் என் லட்சியம். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா" சட்டென காலில் விழுந்த மகனை இரு கைகளாலும் அள்ளி எடுத்துக் கொண்டார் சிவநேசன். மனதுக்குள் அஞ்சனாவுக்கு நன்றி செலுத்தியபடி
{kunena_discuss:785}