(Reading time: 11 - 21 minutes)

“ஆனா ஏன் தாரா.. நீ இங்க இருந்துட்டே அதையெல்லாம் சால்வ் பண்ணிக்கலாம்ல.. எதுக்கு பார்க்காம பேசாம இருக்கனும்..? அவ்வளவு ஏன்? நீ எங்க இருக்கன்னு கூட சொல்ல கூடாதுன்னு.. I feel like you’re doing too much di… these are all very much childish… you shouldn’t have done this to my atthim. I feel pity on him. உனக்கு கஷ்டமாவே இல்லையா?!”

“உனக்கு தெரியுமா எனக்கு கஷ்டமா இல்லன்னு? எவ்வளோ வேதனையோட ஒவ்வொரு நாளையும் கஷ்டப்பட்டு தள்ளறேன்னு தெரியுமா டீ?!.. உப்ப்ப்ப்ப்..... It’s enough kaavya. என் பீலிங்க்ஸ் இப்போ புரியாது உனக்கு. கல்யாணம் ஆன அப்புறம் தானா புரியும். So, just don’t bother about us now. ஆனா எனக்கு உன்னல ஒரு காரியம் ஆகனும் டீ... ப்ளீஸ்”என்றுவிட்டு சில பல விஷயங்கள் கூறினாள். அனைத்திற்கும் காவீ “ம்ம்...”கொட்ட, “சரி உன் ஆளு என்ன சொல்றான்..?!” என அவளை அடுத்த கேள்வி கேட்கவிடாமல், எதை பற்றி பேசினால் அவளின் கவனம் குவியுமோ 

“அந்த பக்கியப்பத்தி பேசாத... அது கோவா போகுதாம் இன்னிக்கு. அதுவா என்கிட்ட அவன் சொல்லவே இல்ல. உன் ககன் தான் சொன்னாரு. திரும்பி வந்த அப்புறம் இருக்கு டீ அவனுக்கு..”என்று காவ்யா கருவ... அந்த புகையில் தாரா, ககன், உதய் மூவருக்கும் இருமல் வந்தது.

தண்ணீர் குடிக்கும்போது சிரித்ததால் தாராவுக்கும்.. பொக்கே கடையில் தாராவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிர்க்கும் பொருட்டு செயற்கை இருமல் ககனுக்கும்... மிக முக்கியாமாக, காவ்யா கருவியதால் நிஜமாகவே உதய் தொண்டை வெளியில் வரும் வரை இருமினான்.

ங்கு ரயிலில் உதய், “அம்மா.. ‘உஹ்ஹு... உஹ்ஹு..’(இருமல் சவுண்ட் மக்களே... பயப்பட வேண்டாம்..) அப்பா... ‘உஹ்ஹு... உஹ்ஹு..’ பகவான்ஜி... ‘உஹ்ஹு... உஹ்ஹு..’ பாபாஜி.. ‘உஹ்ஹு... உஹ்ஹு..’முடியலையே... எதுக்கு இப்படி திடீர்னு இருமுது.. ‘‘உஹ்ஹு... உஹ்ஹு..’ கா...வீ.................”

“ஹான்...... அது எப்படி காவ்ஸ் பேரை சொன்னதும் இருமல் நின்னு போச்சு..!! அப்போ அவதான் ஏதோ சாபம் விட்ருக்கா...! செல்லம்... மாமா மேல கோவமா இருக்கியா?? மாமாவ திட்டிட்டு இருக்கியா..?? எனக்கு தெரியுமே.... நான் உன்கிட்ட இந்த ட்ரிப் பத்தி சொல்லலன்னு தானே கோவம்..! என்ன பண்ணறது.. எனக்கு நீயா உன் லவ் பத்தி என்கிட்டே சொல்லணும். அதுக்கு நீ என்ன மிஸ் பண்ணனும்... அதான்..!”என்று அவனின் வருங்கால மனைவி காவ்யாவை மனதுக்குள் கொஞ்சிக்கொண்டு இருந்தான். தாராவின் உடன் பிறவா சகோதரியும், ககனின் ‘நாட்டி’ மைத்துனியுமான அதே காவ்யா தான்.

உதய்-காவ்யா ஜோடிக்கு இன்னும் ஆறு மாதத்தில் திருமணம். அதுவும் தாரா மற்றும் காவ்யாவின் பெற்றோர்கள் உதய்யை பார்த்து, அவனின் குணத்தில் கவரப்பட்டு அவனின் பண்புகளுக்கு மயங்கியதுடன், உதய்யின் பெற்றோர்களுக்கும் காவ்யாவை பிடித்ததால் இவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். (உதய் நமக்கு மட்டும் தான் ஊறுகா ;) ).

உதய்-காவ்யாவின் திருமணத்துக்குள் ககன் தனது மனைவியை தேடி கண்டுபிடிப்பானா? கண்டுபிடித்தாலும் அவனின் மனைவி அவனுடன் வருவாளா?? போகப் போகத் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.!!

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1151}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.