“ஹ்ம்ம்..”
“நாம பார்கிங்லே பேசுறத பார்த்துட்டு செந்தில் என்ன விஷயம்னு கேட்க ஆரம்பிச்சுட்டான்.. நான் ஏதோ சொல்லி சமாளித்து விட்டேன்.. “
“ஐயோ.” என,
“ஒன்னும் பிரச்சினை இல்லை.. அவன் சந்தேகம்தான் படுறான்.. நாம அதுக்குள்ளே உஷாராகி விடலாம்.. வேற எதாவது யோசிக்கலாம்.. “
“ஹ்ம்ம்..” என, இந்த முறை சற்று அச்சத்துடன் வர,
“ஹேய்.. ஒன்னும் பயம் இல்லை... அவனுக்கு தெரிந்தாலும் யார்கிட்டயும் சொல்ல மாட்டான்.. நாம சேபா இருக்கலாம்னு தான் உன்கிட்ட சொல்றேன் .. புரியுதா ?’
“சரி..” என்றாள்.
“உன்னாலே நாளைக்கு கோவிலுக்கு வர முடியுமா? “ என வினவ
“எந்த கோவில்?”
“நம்ம காலேஜ் காம்பஸ் கோவில் தான்.. எப்போ என்றால் நாளைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டைம் தான் ப்ரீ அவர் வரும் .. அப்போ நீ அங்கே வந்துடு.. காலேஜ் டைம்ஆ இருக்கிறதாலே யாரும் இருக்க மாட்டங்க.. “
“ஆனால் கேமரா இருக்குமே..”
“அது நான் பார்த்துக்கறேன்.. நான் ஆபீஸ் ரூம் போயிட்டு அங்கே வரேன்.. நீ சாதரணாமா அங்கே வா.. அங்கே எதசையா மீட் பண்ற மாதிரி பண்ணிட்டு, அப்படியே நம்ம staff ரூம் வர வரைக்கும் பேசிட்டு வரலாம்..”
இது மலருக்கும் சரி என்று தோன்ற, அவள் வர சம்மதித்தாள்.
ஹாய்.. friends..
இந்த சீரீஸ் ஆரம்பிச்சதுலேர்ந்து எக்கச்சக்க பர்சனல் கமிட்மென்ட்ஸ் .. சோ முன்னாடி மாதிரி அக்டிவா இருக்க முடியல... அப்போ ஸ்கூட்டியா இருக்கேனான்னு கேட்க கூடாது.. உங்க எல்லோரோட கம்மேன்ட்சும் நான் ரெகுலரா பார்க்கறேன்.. & அது தரும் பூஸ்ட்.. வேற லெவல் தான் எனக்கு.. தொடர்ந்து கமெண்ட் பண்ணுங்க.. கூடிய சீக்கிரம் பழையபடி திரும்பி வரேன்.. நன்றி..
அனைத்து சில்ல்சீ பிரெண்ட்ஸ்க்கும்
அட்வான்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..
தொடரும்!
{kunena_discuss:1126}