அவள் வயிற்றில் உருவான கருவைக்கலைக்க மருத்துவமனைக்கு சென்றுவிட்டாள்.
அது தெரிந்த ஆனந்தன் பதறி மருத்துவமனைக்கு ஓடினான்.
அங்கே அவளது முயற்சியைத் தடுத்துவிட்டான்.
“எந்த நம்பிக்கையில் நான் இந்தக் குழந்தையைப் பெத்துப்பேன்? அந்தக் குழந்தைக்கு அப்பாவா நீங்க என்ன செய்வீங்க? இப்பவே நாம அடுத்தவங்களுக்குப் பாரமா இருக்கோம். இனி நம்ம குழந்தையும் அதில் சேரனுமா? வேண்டாம். இந்தக் குழந்தை நமக்கு வேண்டாம். நம்மளால் எப்ப சொந்தக்கால்ல நிக்க முடியுதோ அப்ப குழந்தைப் பெத்துக்கலாம்.”
“நாம நினைச்ச நேரத்தில் குழந்தை பெத்துக்க முடியாது. பைத்தியக்காரத்தனமா பேசாம வீட்டுக்கு வா.”
“என்னால் முடியாதுங்க. ஒரு காதலியா, மனைவியா உங்ககிட்ட என்ன இருக்குன்னு பார்க்காம நீங்க கூப்பிட்டப்ப உங்களோட வர முடிஞ்சது. ஆனா ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
து கணவன் மீது இருந்த கோபத்தால் அதே வீட்டில் இன்னொரு பொண்ணைக் கொடுப்பதா? என்று பேசாமல் விட்டுவிட்டாள்.
அப்படி வண்ணமலரின் மீது விருப்பம் இருந்தும் தனக்காக அவளை ஒதுக்கி வைத்திருக்கிறான். தங்கைகள் கூடப்பிறந்தவர்கள். ஆனால் அதே பாசம் வினோதகனுக்கும் தன் மீது இருந்தது கண்டு மனம் நெகிழ்ந்தாள்.