நீ என் உயிரில் கலந்திருக்கேடா. உன்னை எப்படி மறக்க முடியும்?”
அவள் கண்ணீரோடு அவனை கட்டிக்கொண்டு கதறினாள்.
“அன்னிக்கு வினு தன்னோட அறையில் புலம்பினதைக் கேட்டுட்டேன். அண்ணன் நினைச்சிருந்தா அந்த விபத்தில் இருந்து தப்பிச்சிருக்கலாம். ஆனால் வேணும்னே அவன் தன்னைக் காப்பாத்திக்காம விட்டுட்டான்னு விபத்தை நேரில் பார்த்தவங்க சொன்னதை இப்பக்கூட என்னால் நம்ப முடியலைன்னு சொல்லி அவர் கதறி அழுதப்ப அதை நான் கேட்டுட்டேன். உங்களோட அழிவுக்கு நான்தான் காரணம்னு என் மனதை உறுத்த ஆரம்பிச்சிடுச்சு. ஆனால் நீங்க உயிரோடு இருக்கீங்க. திரும்ப வருவீங்கன்னு என்னோட உள்ளுணர்வு ஏனோ தவிச்சது. அதுதான் நான் எந்த சடங்கையும் செஞ்சிக்க மாட்டேன்னு தடுத்தேன்.”
“ஆமா! வினு சொன்னான்.”
“வினுவா. அப்ப உங்களுக்கு எந்த மறதியும் இல்லைன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
ா?”
வருத்தமுடன் கேட்ட அவனுக்குப் பதில் சொல்லாமல் விலகிப்போனாள்.
சற்று நேரத்தில் திரும்பி வந்த அவளிடம் ஒரு ஃப்ளக்ஸ் இருந்தது.
அதை நீட்டினாள்.
அவன் புரியாமல் அதை வாங்கிப்பார்த்தான்.
“ஏய்! இது நான்ல. உனக்கு எப்படி கிடைச்சது?” கேட்ட அவன் கண்கள் பளிச்சிட்டன.