அத்தகைய பாசம் இருந்ததால்தான் அவளது நலனை அவனால் நாட முடிந்தது.
வீட்டினர் மூலம் வண்ணமலர் வினோதகனின் பிரியம் பற்றி தெரிந்து கொண்ட மனுதர்மன் கொடிமலர் திருமணத்தோடு அவர்கள் திருமணத்தையும் முடித்துவிடலாம் என்று சொல்லிவிட்டான்.
ஆனால் அவர்கள் ஏன் இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்று மட்டும் அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவளிடம் நின்று பேசுமளவிற்கு வினோதகன் ஓய்வாக இல்லை. அவனுக்கு திருமண வேலைப்பளு இருந்ததா? இல்லை இவளிடம் தனிமையில் பேச பயமா? என்று அவளுக்கு சந்தேகமாக இருந்தது.
அவன் மட்டுமல்ல. மற்றவர்களும் அப்படித்தான். தங்கள் பக்கம் இருந்து தர வேண்டிய விளக்கத்தை அவளிடம் கொடுத்த பின்னர் அவர்கள் யாரும் அவளிடம் பேச என்று வரவில்லை. இவளே பேச முயன்றாலும் வேலை இருக்கிறது என்று சென்றுவிட்டனர்.
மனு
...
This story is now available on Chillzee KiMo.
...
ிந்துவிட்டது.
ஜன்னல் வழியாக வானத்து நிலவை வெறித்தபடி நின்றிருந்தாள் நேசமலர்.
திருமணமானவர்களுக்கான சடங்கு ஏற்பாடாகியிருந்தது.
மனுதர்மனின் தமக்கையும் தாயும் யாரோ மாதிரி இந்த திருமணத்திற்கு வந்துவிட்டு சென்றிருந்தனர்.