(Reading time: 23 - 46 minutes)

அதுவும் அவளது மனதை உறுத்தியது.

அத்துடன் அவளது கணவன் அவளுக்கு கெடு விதித்திருந்தான். அன்று இரவு மட்டும். அதன் பிறகு அவள் அவனோடு வாழ்வாளா இல்லை தாய் வீட்டுக்கு சென்றுவிடுவாளா என்று தெரியும்.

அவனுக்கு பழைய நினைவு திரும்பாமல் அவளால் அவனோடு ஒன்றி வாழ முடியாது. அதற்காக அவனை விட்டு விலகவும் முடியாது. என்ன செய்வதென்ற குழப்பத்திலேயே அவள் சரியாக சாப்பிடவில்லை.

திருமணத்தில் அலைந்த அலைச்சல் வேறு. எல்லாமாக சேர்ந்து அவளுக்கு தலைசுற்றி கீழே விழுந்துவிட்டாள்.

எல்லோரும் பதட்டமுடன் ஓடி வந்தனர்.

“பதட்டம் வேண்டாம். அவளுக்கு இன்னிக்கு அலைச்சல் அதிகம். நான் பார்த்துக்கிறேன்.”

என்ற மனுதர்மன் அவளை தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான்.

எல்லோரும் நிம்மதியாக தங்கள் வேலையைப் பார்க்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்.”

“ஆமா! பெரிசா நாடகம் போட்டீங்க. நான் நீங்க என்னை மறந்துட்டீங்கன்னு எவ்வளவு துடிச்சுப்போயிட்டேன் தெரியுமா?”

“உன்னை மறக்கிறதா? அந்த விபத்தினால் சுயநினைவு மறந்து கிடந்தப்ப கூட அம்முக்குட்டின்னு உன்னைதான் நினைச்சுப் புலம்பினேனாம். அங்கே என்னைப் பார்த்துக்கிட்ட நர்ஸ் சொன்னாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.