“விக்கி..சேறு மேல தெறிக்குது..கம்ப கீழ போடுங்க..”,கம்பால் மண்ணை தூர் வாரிக்கொண்டிருந்தவனை கடிந்து கொண்டாள்..
“சாரிப்பா..”,என்றவன் அந்தக் கம்பை கீழே போட்டான்..அதுவோ நங்கென்ற சத்தத்துடன் சீற்றில் குத்தி நின்றது..
“என்னதிது இவ்ளோ சத்தம் கேட்குது..”,என்றபடி அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்..
லிங்கதிற்கும் வில்வமரதிற்கும் இடையிலிருந்த சேற்றிலிருந்து கம்பை மெதுவாக வெளியில் எடுத்த விக்கி அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தான்..
சுமார் அரையடிக்குக் கீழே சதுர வடிவில் வெளிப்பட்டது ஒரு இரும்பிலான ஒரு கல்..
“டார்ச்சை நல்லா பிடி மயா..”,என அதட்டிய க்ரியா தன் கைகளால் அந்த இரும்புக் கல்லை சுத்தம் செய்தாள்..
என்ன சிம்பிள் இது என்பது போல் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அந்தக் கல்லில் பதிந்திருந்த பசுவின் உருவத்தைக் கண்டு சிறு யோசனையில் ஆழ்ந்தனர்..
“ஒருவேளை சிவசிஷ்யனுக்கு இதைப் பற்றியான விஷயம் தெரியுமோ..??”,என்று கேட்டான் வ்ருதுஷ் யோசனையாக..
“எனக்கென்னவோ அப்படித் தோனல வ்ருதுஷ்.. சப்போஸ் அவருக்கு தெரிஞ்சிருந்துதுனா இதைப் பற்றிச் சொல்லியிருப்பார்..”,என்ற விக்கி,”வேற ஏதோ விஷயம் இதுல இருக்கு..”,என்றான்..
“மயா ஒரு நிமிஷம் அந்த டார்ச்சை கொடு..”,என்று அதை வாங்கிய தியா அதன் வெளிச்சத்தை கல்லின் மீது சுற்றியிருந்த வேர்களில் பாய விட்டாள்..
சிறு யோசனைக்குப் பின் தன் கைகளை வேர்களுக்கு இடையில் தெரிந்த பொந்துக்குள் நுழைக்கத் துவங்கினாள்..
வணக்கம் நண்பர்களே..
உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
நன்றி..
வியூகம் வகுக்கலாம்...
{kunena_discuss:1111}