அப்போது செழியன் “ஏண்டா.. இதில் இருக்கிற பாதி பேர் கல்யாணம் முடிஞ்சவங்க... மத்தவனுகளுக்கு ஆள் இருக்கு.. அப்புறம் என்னத்துக்குலே சைட் அடிக்கீறிங்க.. “
“உனக்கு டெக்னிக்கே தெரியல மச்சா.. கார்த்திகை மாசத்துலே கோவிலே அடிப்ரதட்சணம் பண்ற பொண்ணுங்கள கரெக்ட் பன்னுவானுங்க.. மார்கழி மாசம் விட்ட விடியற்காலையில் அதே பொண்ணுகள பார்க்க கோவிலுக்கு போவானுக.. இப்போ தை பொறந்ததும் தேதி வைக்க வசுருவாணுக.. நம்ம பயலுவ.. அதுலே கொஞ்சம் விட்ட குறை, தொட்ட குறை எல்லாம் இன்னிக்கு காலையில் போய் சைட் அடிச்சு கரெக்ட் பண்ணினா தான்.. நாளைக்கு தை பொறந்தவுடனே அடுத்த கட்ட நடவடிக்கை ஏற்பாடு பன்னனும்லே.. “
“அது சரி.. செந்தில் எங்க ? பொங்கலுக்கு ஊர்க்கு வாரதாதனே சொன்னான்.. ஒரு வேளை மாமனார் வீட்டுக்கு போயிருக்கானா?
“அது எல்லாம் இல்லை.. அவுக தான் சீர் வைக்க இவுக வீட்டுக்கு வந்துருக்காங்க.. அதான் பய புள்ள பம்மிக்கிட்டு சீன் காட்டிகிட்டு இருக்கான்.. நாளைக்கு அவங்க அந்தாலே கிளம்பினதும்.. இங்கன ஓடியே வந்துருவணாம. சொல்லி விட்டான்..”
இதை எல்லாம் கேட்டபடி வந்தவனுக்கு வழக்கம் போல் உற்சாகம் தொற்றிக் கொண்டது. இது தொடருமா?
தொடரும்!
{kunena_discuss:1126}