தென்றல்தான் துடைத்துவிட்டாள்.
இதே தீபிகா எத்தனை கர்வத்துடன் இருந்திருக்கிறாள்?
பணம் தந்த செருக்குடன் கம்பீரமாக வளைய வந்திருக்கிறாள்.
இப்போது துவண்டு துணியாய் கிடக்கிறாள்.
தனக்கு முதுகெலும்பு உண்டு என்பதையே மறந்துபோன கோழை போன்று நடந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் இப்போது படுக்கையில் கிடக்கிறாள்.
தென்றல் தீபிகாவின் படுக்கையருகே ஒரு ஸ்டூலை எடுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.
கலைந்திருந்த அவளது தலையைக் கோதிவிட்டாள்.
அவளது கரிசனையில் மீண்டும் தீபிகாவின் கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
“ஸ்ஸ்! என்ன தீபி இது? நீ இப்படி கோழையாயிருப்பேன்னு நான் நினைச்சேப்பார்க்கலை.”
“எனக்கு வேணும் தென்றல். பணம் இருக்குங்கிற திமிர்ல நான் எப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்? உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து வேலை செய்யவில்லையா? அந்த அளவிற்கா அவளது மனம் கலங்கியிருக்கிறது?
யோசனையுடன் அவளைப் பார்த்தாள்.
தீபிகா ஆழ்ந்த உறக்கத்துக்குப் போயிருந்தாள்.
ஆழ் மனதிலிருந்து அவள் செய்த தப்பிற்கு மன்னிப்புக்கேட்கிறாள் என்றால் உண்மையிலேயே அவள் மனம் திருந்திவிட்டாள் என்றுதானே அர்த்தம்?