ஸ்டெல்லா நினைத்த மாதிரியே வண்டியை மெதுவாகத்தான் ஓட்டிக்கொண்டிருந்தாள் தென்றல்.
தீபிகாவைப் பார்த்ததில் இருந்தே தனது அன்பு இல்ல வாழ்க்கையும், பள்ளிப்பருவமும் நினைவுக்கு வந்தது.
அவள் பத்தாவது தேர்வு முடிவில் மாவட்ட அளவில் முதலாவதாக வந்துவிட அங்கே உள்ள தனியார் பள்ளி ஒன்று அவளுக்கு இலவசமாய் தங்கள் பள்ளியில் இடம் தந்து படிக்க வைக்க ஆசைப்பட்டது.
அன்பு இல்ல நிர்வாகியான நிர்மலா அம்மாவும் அதற்கு சம்மதம் கொடுத்துவிட்டார்.
அந்தப்பள்ளி அந்த மாவட்டத்திலேயே நல்ல பெயர் எடுத்திருந்தது.
நிர்வாகத்தினரும் மிகவும் நல்லவர்கள்.
அதனால் நிர்மலாவும் சம்மதித்துவிட்டார்.
அந்தப் பள்ளிப்பருவ வாழ்க்கை தென்றலுக்கு மறக்க முடியாமல் போனதற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
வனைக் கண் முன்னே கொண்டு வரும் ஆசை மகளை அணைத்துக்கொள்ளும்போது அவனே அருகே இருப்பது போல் மனதுக்கு இதமாய் இருக்கிறது.
‘வருண். ஐ லவ் யு.’
கணவனிடம் காதலைச் சொன்னவள் மகளது நெற்றியில் முத்தமிட்டாள்.
வேலையை முடித்து காந்திமதி அறைக்குள் நுழைந்த போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.